Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்

September 29, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கண்டனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

குருந்தூர் மலை சட்டவிரோத பௌத்த கட்டுமானம் உள்ளிட்ட விவகாரங்களில் தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளமை தமிழர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விடயமானது நாட்டின் நீதிப் பொறிமுறையையே கேள்விக்குறி ஆக்கியுள்ளது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு நேற்றையதினம்(28.09.2023) வெளியிட்ட ஊடக அறிக்கையில் ஹசுட்டிக்காட்டியுள்ளது.

ஊடக அறிக்கை
மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க முடியாத நாட்டின் சட்டவாக்க சபையான நாடாளுமன்றை ஒட்டு மொத்த தமிழ் எம்பிகளும் புறக்கணிக்க வேண்டுமென நாம் ஆழமாக வலியுறுத்துகின்றோம்.

குருந்தூர் சட்டவிரோத பௌத்த கட்டுமானம் தொடர்பாக நீதியான தீர்ப்பு வழங்கியமைக்காக தொடர் அழுத்தம் மற்றும் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்ட முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் நேர்மையை போற்றும் வகையில் தமிழ் சமூகமாக ஆதரவை வெளிப்படுத்துகின்றது.

அத்துடன் அவரின் இந்த முடிவுக்கு காரணமான அழுத்தங்களை பிரயோகித்த சகல தரப்பினர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர் சார்ந்த அனைத்து கட்டமைப்புகளும் குறிப்பாக சட்டவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பிக்கவும் வேண்டுகின்றோம்.

இலங்கையின் சகல முற்போக்கு சக்திகளும், ஐ.நா அமைப்புக்களும் நீதியை வழங்கும் நீதிபதிக்கே ஏற்பட்டுள்ள இந்த பாரதூர நிலையை சீர்செய்ய நீதி பரிபாலனம் சுயாதீனமாக இயங்க உச்சபட்ச நடவடிக்கையை இந்த துக்ககரமான தருணத்தில் எடுக்க வேண்டி நிற்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: #Court#Judge#Mullaitivu#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

உயிர் அச்சுறுத்தல்: பதவியை துறந்து நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி!

Next Post

பிரான்ஸில் பரபரப்பு: லொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் மீட்பு!

Next Post
பிரான்ஸில் பரபரப்பு: லொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் மீட்பு!

பிரான்ஸில் பரபரப்பு: லொறிக்குள் சிக்கியிருந்த 6 பெண்கள் மீட்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.