Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

உயர்தர பரீட்சையை பிற்போட்டால் 10,000 பாடசாலைளை மூடநேரிடும்!- கல்வி அமைச்சர் விளக்கம்!!

October 3, 2022
in உள்ளுர்
உயர்தர பரீட்சையை பிற்போட்டால் 10,000 பாடசாலைளை மூடநேரிடும்!- கல்வி அமைச்சர் விளக்கம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை திகதியை பிற்போட்டால் 10 ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாதகாலத்துக்கு மூட வேண்டி ஏற்படுகின்றது.

சாதாரண தர பரீட்சையையும் உரிய காலத்தில் நடத்த முடியாமல்போகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஹேஷா விதானகே உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை பிற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே கருத்துத் தெரிவித்தபோது, பரீட்சை திணைக்களம் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு அதிக காலம் எடுப்பதால், அடுத்த தவணை உயர் தர பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு அதற்காக தயாராவதற்கு காலம் போதாது. கடந்த வருட உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மாதமே வெளியிடப்பட்டது.

இந்த வருட உயர்தர பரீட்சை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியாயின் இரண்டாவது தடவையாக பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு 98 நாள்களே இருக்கின்றது.

அதனால் உயர்தர பரீட்சையை 2 மாதங்களுக்காவது பிற்போட வேண்டும் என்று அந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்-என்றார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர், கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போட்டால் 10 ஆயிரம் பாடசாலைகளை ஒரு மாத காலத்துக்கு மூடவேண்டி ஏற்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்கனவே பாடசாலை நாள்கள் குறைவாகவே நடந்துள்ளன.

ஒரு மாதத்துக்கு பாடசாலைகளை மூடுவதால் மாணவர்களின் பாடத் தவணைகளை உரிய காலத்துக்கு முடிக்க முடியாமல் போகின்றது. அதேநேரம் பாடசாலை நேர அட்டவணைக்கும் பரீட்சை நேர அட்டவணைக்கும் இடையில் முரண்பாடு ஏற்படுகின்றது.

உயர்தர பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு பிற்போட்டால் அடுத்து இடம்பெற ஏற்பாடாகி இருக்கின்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த முடியாமல் போகின்றது. இவ்வாறு சென்றால் ஒரு நிலைமைக்கு கொண்டுவர முடியாமல் போகும்.

கொரோனாத் தொற்று காரணமாக அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டிருந்தன. அதனால் ஏற்பட்ட இந்த பிரச்சினையை தற்போதுதான் ஓரளவுக்கு சரி செய்து வருகின்றோம்.

உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதால் சில மாணவர்களுக்கே கஷ்டமான நிலை ஏற்படுகின்றது. முதல் தடவையாக பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இரண்டாம் முறை பரீட்சை எழுதுவதற்கு எதிர்பார்த்திருக்கும் மாணவர்களுக்கு பரீட்சைக்கு தயாராவதற்கு 3 மாதம் வரை காலம் இருக்கின்றது. அவர்கள் பரீட்சைக்கான பாடநெறியை பூரணப்படுத்தி இருக்கின்றனர். என்றாலும் பரீட்சை விடய தானங்களை மாற்றிப் பரீட்சைக்கு முகம்கொடுப்பவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படலாம்.

பரீட்சைகளை பிற்படுத்தும்போது அடுத்த வருட புதிய பாடசாலை தவணையை மார்ச் மாதம் 28ஆம் திகதி ஆரம்பிக்க முடியாமல் போகும். கடந்த வருடம் புதிய பாடசாலை தவணை ஏப்ரல் மாதத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது. அதனால் இரண்டு தவணைகளையே எமக்கு பூரணப்படுத்த முடிந்தது.

அடுத்த வருடமும் இந்த நிலையே ஏற்படும். என்றாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய, உயர்தர பரீட்சை திகதியில் மாற்றத்தை செய்ய முடியுமா என பரீட்சை திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைக்கின்றேன்.

திகதியில் மாற்றம் ஏற்படும்போது ஏனைய மாணவர்களுக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது.-என்றார்.

Tags: உயர்தரப் பரீட்சைகல்வி அமைச்சர்கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைசுசில் பிரேமஜயந்தபாடசாலை
Previous Post

விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய மைத்திரிபால!

Next Post

இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு பாராட்டு!

Next Post
இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு பாராட்டு!

இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஆணைக்குழு பாராட்டு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.