Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இராணுவத்தினரின் உதவியுடன் தப்பியோடிய கோட்டாபய! – நடந்தது என்ன?

July 13, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இராணுவத்தினரின் உதவியுடன் தப்பியோடிய கோட்டாபய! – நடந்தது என்ன?
0
SHARES
Share on FacebookShare on Twitter

சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச செய்தி ஊடகங்களது தகவல்களின் படி இராணுவ விமானம் ஒன்றில் அவரும் அவரது மனைவி உட்பட வேறு மூவரும் மாலைதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவலை இன்று அதிகாலை பிபிசி உறுதி செய்தது. ஆனால் அவரது விமானம் எந்த நாட்டுக்குச் செல்கிறது என்பதை அது குறிப்பிடவில்லை.

73 வயதான கோட்டாபய அவரது மனைவி, மெய்க்காவலர் ஒருவர் உட்பட நான்கு பேர் அன்ரனோவ் – 32 ரக விமானம் ஒன்றில் கட்டுநாயக்காவிலிருந்து மாலைதீவுத் தலைநகர் மாலேக்குப் புறப்பட்டுள்ளனர் என்பதை விமான நிலைய அதிகாரிகள் ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்களது கடவுச் சீட்டுக்கள் முத்திரையிடப்பட்டு இராணுவ விமானம் ஒன்றில் ஏறிப் புறப்பட்டுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்று பயண ஏற்பாடுகளைக் கையாள்கின்ற குடியகல்வு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமானத்தில் ஜனாதிபதியோடு செல்கின்ற நான்காவது நபர் பஸில் ராஜபக்ச என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் அவர் அதே விமானத்தில் செல்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் அவரும் கொழும்பை விட்டுப் புறப்பட்டுள்ளார் என்ற தகவலை பிபிசி வெளியிட்டுள்ளது.

கோட்டாபய மாலைதீவில் ஒதுக்குப் புறம் ஒன்றில் சில தினங்கள் தங்கியிருந்து விட்டுப் பின்னர் அங்கிருந்து டுபாய்க்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Tags: இராணுவத்தினர்இலங்கைகோட்டாபயதப்பியோடல்மாலைதீவுஜனாதிபதி
Previous Post

இன்றைய ராசிபலன்- 13.07.2022

Next Post

கோப்பாயில் மூன்று வீடுகளில் திருட்டு!!- 10 சந்தேகநபர்கள் கைது!!

Next Post
கோப்பாயில் மூன்று வீடுகளில் திருட்டு!!- 10 சந்தேகநபர்கள் கைது!!

கோப்பாயில் மூன்று வீடுகளில் திருட்டு!!- 10 சந்தேகநபர்கள் கைது!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.