Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இந்தியாவிற்கு இறுதி பலப்பரீட்சையாக மாறியுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல்

September 15, 2024
in இந்தியா, இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

புவிசார் அரசியல் பந்தயத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது இந்தியாவிற்கு முக்கிய நகர்த்தல் புள்ளியாகும்.

வெளியுறவுக் கொள்கையை வகுக்கும் போது, ​​இந்தியாவானது அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் கவலைகளை கருத்தில் கொண்டே செயற்படும்.

அவ்வாறே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவுசெய்யும் போட்டியில் சில நேரடி தலையீடுகள் மூலமும், மறைமுக உள்நுழைவுகள் மூலம் இந்தியா தனது பங்கை வகித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவானது இலங்கை பிராந்தியத்தில் ஆதிக்க அரசியலில் ஈடுபட்டிருந்ததான கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.

அந்த நேரத்தில் இலங்கை அரசாங்கம் அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததால் நிலைமை மோசமடைந்ததை வரலாறுகள் காண்பிக்கின்றன.

அவ்வாறு ஒரு மாற்றத்தை விரும்பாத இந்தியா தற்போது 21 ஆம் திகதி இலங்கை மக்களால் தெரிவு செய்யப்படும் தலைவருடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு வலுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

இலங்கையுடன் ஒப்பிடும்போது இந்தியா ஒரு பெரிய சக்தி. பொருளாதார ஒத்துழைப்பையும் தாண்டி அவர்கள் இலங்கையின் மீது நாட்டம் கொள்வது புவிசார் ராஜதந்திரத்தின் வெளிப்பாடுகளில் ஒன்று.

மேலும் ஐ.நா பாதுகாப்பு அமைப்பில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கு அண்டை நாடுகளுடனான ஒத்துழைப்பென்பது அவர்களுக்கு மிக முக்கிய ஆதரவு பொருளாகும்.

இதனை மையப்படுத்தியே இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளுடனான நகர்வில் இந்திய முக்கிய நகர்த்தலை மேற்கொள்கிறது.

நிலையான மற்றும் முற்போக்கான இலங்கையை இந்தியா தற்போது எதிர்பார்க்கிறது.

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் என்பது மும்முனை போட்டியாளர்களையும் தாண்டி இந்தியாவிற்கும் ஒரு இறுதி பலப்பரீட்சையாக மாறியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு தமக்கு சாதகமான தலைவர் ஒருவர் இலங்கையில் ஆட்சிசெய்ய வேண்டும் என்பதையும் இந்தியா எதிர்பார்க்கின்றது.

Previous Post

மிதக்கும் சூரியசக்தி கருத்திட்டம் தொடர்பான அபிவிருத்தி! அமைச்சரவை அங்கீகாரம்

Next Post

13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதி

Next Post
13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதி

13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் : சஜித் மீண்டும் உறுதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.