Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இத்தாலியில் அதிகரித்து வரும் மனித வர்த்தகம்

December 29, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
இத்தாலியில் அதிகரித்து வரும் மனித வர்த்தகம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, அந்நாட்டில் குற்றச் செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மனித வியாபாரம் மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக உள்ளது

இத்தாலியில், மனித வர்த்தகம் என்பது ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, குற்றச்செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக உள்ளது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் சுரண்டல் நோக்கத்திற்காகக் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்றும் கூறியுள்ளது Save The Children எனப்படும் உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

இத்தாலி மற்றும் ஸ்பெயின் எல்லைகளில் மனித வியாபாரத்தைத் தடுக்கும் விதமாக, ஏழு அமைப்புகள் இணைந்து E.V.A. எனப்படும் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இவ்வமைப்பின் தேசிய திட்டங்கள் மற்றும் சட்ட ஆலோசனை அமைப்பின் இயக்குநர் Raffaela Milano அவர்கள், பல ஆண்டுகளாக, மனித வர்த்தகம் ஒரு மறைக்கப்பட்ட நிகழ்வு என்பதையும், அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பெரிய எண்ணிக்கையில் சிறிய அளவே என்பதையும் நாங்கள் கண்டோம் என்று கூறியுள்ளார்.

ஆபத்தில் உள்ளவர்கள், மனசாட்சியற்ற கடத்தல்காரர்களின் தயவில் இருப்பதால், அரசின் பாதுகாப்பு வலையமைப்பிலிருந்து பல குழந்தைகள் தப்பிச் செல்கின்றனர் என்று கூறியுள்ள Raffaela அவர்கள், கோவிட் நோய்த்தொற்றின் போது, குற்றச் செயல்களில் ஈடுபடும் கடத்தல் நெட்வொர்க் அமைப்பு உடனடியாக டிஜிட்டல் சேவைகளைச் சுரண்டி தன்னை மறுசீரமைத்துக் கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு வகையான வரத்தகங்களுடன் பல வழிகளில் சுரண்டப்படுகிறார்கள் என்றும், பாலியல் மற்றும் தொழிலாளர் சுரண்டல் இரண்டும் பரவலாக உள்ளன என்றும், ஆனால் கட்டாயமாகப் பிச்சையெடுக்கவைத்தல், வீட்டு அடிமைத்தனம், கட்டாயத் திருமணங்கள், கட்டாய குற்றச் செயல் சார்ந்த பொருளாதாரங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும் உள்ளனர் என்றும் உரைத்துள்ளார்.

Tags: #Italy#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Trafficking
Previous Post

ரோபோவின் தாக்குதலால் பொறியியலாளர் படுகாயம்

Next Post

அல்பர்ட்டா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Next Post
அல்பர்ட்டா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

அல்பர்ட்டா மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.