Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!

May 20, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
வடக்கு மாகாணத்தில் நான்காவது “டோஸ்”- வடக்கு சுகாதாரப் பணிமனையின் அவசர அறிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதுக்கு மேற்பட்ட நோய் எதிர்ப்புப் பிரச்சினை உள்ளவர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசியின் நான்காவது டோஸ் (பைஸர்) ஏற்றப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்தவாரம் முதல் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும்,ஏற்கனவே தடுப்பூசிகளை மூன்று தடவைகள் ஏற்றி, மூன்று மாதங்கள் நிறைவடைந்தவர்கள் மட்டுமே தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்தப் பிரதேசங்களுக்குரிய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் தடுப்பூசி ஏற்றப்படும் என்றும், தடுப்பூசி அட்டையைச் சமர்ப்பித்து நான்காவது தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார மருத்துவமனைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி ஏற்றப்படும்.
20 வயதுக்கு மேற்பட்ட பின்வரும் நோய்நிலைமை உள்ளவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

நோய் எதிர்ப்புக் குறைபாட்டு நிலைமை நோயாலோ அல்லது நோய்க்குரிய சிகிச்சையாலோ ஏற்பட்டவர்கள், நாள்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய் நிலைமைகள், திண்ம அங்கங்கள் ( சிறுநீரகம், ஈரல், சுவாசப்பை போன்றவை) மற்றும் என்புமச்சை அல்லது ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்குட்பட்டவர்கள், புற்றுநோய் உடையவர்களில் அதற்கான சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அதற்குரிய சிகிச்சையை நிறைவு செய்தவர்கள், மண்ணீரல் இல்லாதவர்கள் மற்றும் மண்ணீரல் தொழிற்பாட்டு பிரச்சினை உடையவர்கள், வேறு ஏதாவது நோய் நிலைமைகளால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த நிலையில் உள்ளவர்கள் என சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவ நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள் போன்றோருக்கே தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

Tags: ஆ.கேதீஸ்வரன்இலங்கைகொரோனாத் தடுப்பூசிநான்காவது டோஸ்நோய் எதிர்ப்புப் பிரச்சினைவடக்கு மாகாணம்
Previous Post

வீட்டில் இருந்த தம்பதியரை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி!- புளியம்பொக்கணையில் சம்பவம்!!

Next Post

பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும்!! – மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரர்!

Next Post
பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும்!! – மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரர்!

பதவி மீது பேராசை கொண்டால் இதுதான் நடக்கும்!! - மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்த சகோதரர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.