Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!

November 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
யாழில் தொடர் திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கைது! – ஒரு கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஊர்காவற்றுறைப் பிரதேசத்தில் கடந்த 3 மாதங்களாக வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸ்ஸில் தலைமையிலான பொலிஸ் குழுவே சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளது.

சந்தேகநபர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய 60 பவுண் தங்க நகைகளும், ஒரு தொகைப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களாக காரைநகர், புங்குடுதீவு, ஊர்காவற்றுறை, வேலணை போன்ற பிரதேசங்களில் வீட்டில் யாருமில்லாத நேரம் பகல் வேளைகளில் வீடு உடைத்து நகைகள், பொருள்கள் தொடர்ச்சியாகத் திருடப்பட்டு வந்தன.

இது தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

விசாரணைனைகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் கொட்டடியைச் சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர் அவர்களிடம் இருந்து நகைகளைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

வேலணை, அராலி வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து 20 பவுண் தங்க நகைகளும், வங்களாவடியில் உள்ள வீடொன்றில் இருந்து ஏழரைப் பவுண் தங்க நகைகளும், சுருவிலில் உள்ள வீடொன்றில் இருந்து 13 பவுண் நகைகளும், புங்குடுதீவில் உள்ள வீடொன்றில் இருந்து 3 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரம்ப விசாரணைகளில் முழங்காவில் மற்றும் காரைநகர் ஆகிய இடங்களில் உள்ள இரு வேறு வீடுகளில் 11 பவுண் நகைகளைத் திருடியமையை சந்தேகநபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள். அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களால் 16 பிடியாணை உத்தரவுகள் வழங்க்பட்டுள்ளன.

Tags: ஊர்காவற்றுறைகைதுதொடர் திருட்டுநகைகள்மீட்புயாழ்ப்பாணம்
Previous Post

யாழில் நடக்கும் காணி மாபியா! – சட்டத்தரணி, முன்னாள் அதிபர், வர்த்தகர் என நீளும் கைதுகள்!

Next Post

கோத்தாபயவிடம் வாக்குமூலம் பெறவுள்ள பொலிஸார்! – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Next Post
கோத்தாபயவிடம் வாக்குமூலம் பெறவுள்ள பொலிஸார்! – நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

கோத்தாபயவிடம் வாக்குமூலம் பெறவுள்ள பொலிஸார்! - நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.