Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்!!- இதுவரையில் 7 பேர் கைது!!

March 30, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
முல்லைத்தீவு சிறுமிகள் துஷ்பிரயோகம்!!- இதுவரையில் 7 பேர் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16ஆம் திகதி அம்பலவன்பொக்கணைக்கு மாலை நேர வகுப்புக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற 14 மற்றும் 15 வயதுச் சிறுமிகள் இருவர் வீடு திரும்பவில்லை. மாலை நேர வகுப்புக்கும் அவர்கள் செல்லவில்லை. பெற்றோர் இது தொடர்பில் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இரு நாள்கள் கழித்து இரு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சிறுமிகளில் ஒருவருடன் பேஸ்புக் ஊடாகப் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரைச் சந்திப்பதற்காக சிறுமிகள் இருவரும் பஸ்ஸில் மட்டக்களப்பு செங்கலடிக்குச் சென்றமையும், சிறுமிகள் மட்டக்களப்பிலும், யாழ்ப்பாணத்திலும் வெவ்வேறு நபர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் விசாரணைகளில் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மட்டக்களப்பைச் சேர்ந்த 17 வயதான இரு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர். சிறுமிகளைத் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப் பயன்படுத்த வாகனம் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பஸ்ஸில் வந்த சிறுமிகளை வீடொன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகர் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரும், அவரது இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 30 முதல் 35 வயதானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிறிதொரு சந்தர்ப்பத்தில் சிறுமிகளில் ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் 17 வயதுச் சிறுவன் ஒருவரும், சிறுமியின் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.

Tags: FBTTகைதுதுஷ்பிரயோகம்பாலியல் துஷ்பிரயோகம்புதுமாத்தளனைமுல்லைத்தீவு
Previous Post

யாழில் உண்டியல் உடைத்தவர் உடனே சிக்கினார்!!

Next Post

யாழில் சந்தேகநபரைத் தேடிச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!!

Next Post
ஹெரோயின் கடத்திய அண்ணணும், தங்கையும்!! – யாழில் வளைத்துப் பிடித்தனர் பொலிஸார்!

யாழில் சந்தேகநபரைத் தேடிச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.