Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மாணவிகளுக்கு நடுவே பரீட்சை எழுதிய மாணவன் மயக்கம்!!!

February 3, 2023
in இந்தியா, உலகம், முக்கியச் செய்திகள்
மாணவிகளுக்கு நடுவே பரீட்சை எழுதிய மாணவன் மயக்கம்!!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

சுமார் 500 மாணவிகளுக்கு மத்தியில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவன் திடீரென மயக்கம் அடைந்து விழுந்த சம்பவம் பாடசாலையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பீகார் மாநிலத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பெப்ரவரி முதலாம் திகதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் ஷெரிப் பகுதியில் இயங்கி வரும் பாடசாலையில் மனிஷ் ஷங்கர் பிரசாத் எனும் மாணவர் பரீட்சை எழுத சென்றுள்ளார்.

அன்று கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவரும் பரீட்சை எழுதிக் கொண்டிருந்தவேளை திடீரென மயக்கம்
அடைந்து கீழே விழவே பரீட்சை நிலைய மேற்பார்வையாளர் பதற்றம் அடைந்துள்ளார்.

இதனையடுத்து மனிஷ் அருகில் உள்ள சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சில மணிநேரங்களில் மனிஷின் உடல்நிலை சீரானதாக அவனது தந்தை சச்சிதானந்த பிரசாத் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் மனிஷை கவனித்துக்கொள்ளும் அவருடைய அத்தை இதுபற்றி பேசுகையில்,

“பரீட்சை நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தனர். ஏராளமான பெண்கள் சூழ்ந்த பாடசாலையின் தேர்வு அறையில் மனிஷுக்கு பள்ளி நிர்வாகம் இருக்கை கொடுத்துள்ளது. மாணவிகள் சூழ்ந்திருந்ததால் தான் பதற்றமடைந்ததாகவும் அதனால் மயக்கம் வந்துவிட்டதாகவும் மனிஷ் கூறியிருக்கிறான்” என தெரிவித்திருக்கிறார்.

 

Tags: #Bihar#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#WritingExamindia
Previous Post

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழையவே முடியாது: அதிரடி நடவடிக்கை

Next Post

இன்றைய ராசி பலன்கள் 04-02-2023

Next Post
இன்றைய ராசி பலன்கள் 01-02-2023

இன்றைய ராசி பலன்கள் 04-02-2023

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.