Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

பொருளாதார நெருக்கடியால் யாழ். மாநகர அபிவிருத்திகளுக்குத் தடை!! – முதல்வர் வெளியிட்ட தகவல்!!

April 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
பொருளாதார நெருக்கடியால் யாழ். மாநகர அபிவிருத்திகளுக்குத் தடை!! – முதல்வர் வெளியிட்ட தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பொருள் விலையேற்றத்தால் மாநகர சபை தீர்மானித்திருந்த சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நி லமை தோன்றியுள்ளது என்று யாழ்ப்பாணம் மாநகர் முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் நேற்று நடத்திய செய்தியாளர் வந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நகரக் குளத்தைச் சீரமைக்க 40 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அந்த வேலைத் திட்டத்தை மேற்கொண்டால் இரு மடங்கு நிதி தேவையாக இருக்கும் என்று மாநகர முதல்வர் சுட்டிக்காட்டினார்.

மருத்துவமனை வீதி அகலிப்பு, ஸ்ரான்லி வீதி அகலிப்பு போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி மூலங்கள் உள்ள போதும், பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று முதல்வர் தெரிவித்தார்.

விலையுயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார நெருக்கடி போன்றவற்றால் கடந்த காலங்கங்களில் வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட சில வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை தோன்றியுள்ளது என்று தெரிவித்த மாநகர சபை முதல்வர், நிதி மூலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, திட்டவரைவு இறுதி செய்யப்பட்டு ஆரம்பிக்கும் நிலையில் இருந்த பல வேலைத் திட்டங்களை, பொருளாதார நெருக்கடி காரணமாக ஒத்திவைக்க வேண்டிய துர்ப்பாக்கியய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

Tags: இலங்கைபொருளாதார நெருக்கடிமருத்துவமனை வீதி அகலிப்புயாழ். மாநகர சபைவிஸ்வலிங்கம் மணிவண்ணன்
Previous Post

தெல்லிப்பழையில் அரசுக்கு எதிராக கிளர்ந்த மக்கள்!!

Next Post

கோத்தாவுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றவர்கள் மீது தாக்குதல்!! – சிலாபத்தில் பதற்றம்!!

Next Post
கோத்தாவுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றவர்கள் மீது தாக்குதல்!! – சிலாபத்தில் பதற்றம்!!

கோத்தாவுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்றவர்கள் மீது தாக்குதல்!! - சிலாபத்தில் பதற்றம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.