Thamilaaram News

07 - June - 2023
Facebook Twitter Linkedin Instagram
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
Home இந்தியா

திருச்சி மத்திய சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேர் தற்கொலை முயற்சி .

August 19, 2021
in இந்தியா
0
SHARES
Share on FacebookShare on Twitter

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்  இலங்கை
தமிழர்கள் 78 பேர் உட்பட வங்கதேசம், நைஜீரியா, சூடான் பல்கேரியா உள்ளிட்ட
நாடுகளைச் சேர்ந்த 116 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தண்டனை காலம் முடிந்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த
சில ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று இலங்கை தமிழர்கள்  10
பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை உடனே விடுவிக்க
வலியுறுத்தி கடந்த 11ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத்
தொடங்கினர். 8 ஆவது நாளான நேற்று 2 பேரின் உடல்நிலை மோசமானதால் வருவாய்த்
துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திக்
கொண்டிருந்தனர்.

அப்போது, இலங்கை தமிழர்கள் சிலர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு
தற்கொலைக்கு முயன்றனர்.

 உமா ரமணன் என்பவர் வயிற்றிலும், அமல்ராஜ் என்பவர் கழுத்திலும் கத்தியால்
கிழித்துக் கொண்டனர். சிலர் மரங்களின் மீது ஏறிக்கொண்டு, கீழே குதித்து
தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அம்புலன்ஸ்களை வரவழைத்து,
கத்தியால் கிழித்துக் கொண்டதில் காயமடைந்த உமா ரமணன், அமல்ராஜ் மற்றும்
தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ரீகன், நிஷாந்த், நிமலன், ஸ்டீபன் உள்ளிட்ட
14 பேரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு
அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர்
பழனிகுமார்,  மாநகர சட்டம்,  ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல்,
முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் ஜமுனா ராணி உள்ளிட்டோர் உடனடியாக
முகாமுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்பு ஆட்சியர் சிவராசு கூறியதாவது:

முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 மீனவர்கள் ஏற்கெனவே விடுதலை
செய்யப்பட்டனர். பாஸ்போர்ட் வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை
செய்வதற்கான பரிந்துரை,  தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசுக்கு ‘அவசர அறிக்கை’ அனுப்பப்படும்.
தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும்
நலமுடன் உள்ளனர் என்றார்.இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
மத்திய சிறை வளாகத்தில் அதிகளவிலான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

நாட்டை முடக்குமாறு 10 பங்காளிகள் ஜனாதிபதிக்கு கடிதம்.

Next Post

வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறைகள் வௌியீடு.

Next Post

வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறைகள் வௌியீடு.

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

March 6, 2022
துயர் பகிர்வு –  திரு. கந்தைய்யா  தவபாலசந்திரன்

துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்

November 17, 2022
கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

கோயிலில் சங்கிலி அறுத்த கில்லாடிகள்!! – அந்தரங்க உறுப்பில் மறைத்து வைத்த நகைகள் மீட்பு!!

March 1, 2022
வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

March 26, 2022

திடீரென பற்றிய தீயினால் தும்பு தொழிற்சாலை எரிந்து நாசம்

ஜேர்மனியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்! பொலிஸார் வெளியிட்ட தகவல்

அரசாங்கம் கூறுவது போல் இந்தாண்டு மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது – விமல் வீரவங்ச

கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023

Recent News

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவன்! காரணம் வெளியானது

June 7, 2023
பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

பிரபாகரனின் தயார் எழுதிய இறுதி கண்ணீர் கடிதம்!

June 7, 2023
இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்

June 7, 2023
மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

மின்னஞ்சல் கணக்குகளை திறக்கும் பாடசாலை மாணவர்களுக்கான தகவல்

June 7, 2023
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.