Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

சமூக விரோதச் செயல்களை தடுப்பது தொடர்பில் கூட்டம்!!

April 11, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
சமூக விரோதச் செயல்களை தடுப்பது தொடர்பில் கூட்டம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பேசாலை ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக விரோதச் செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று சாலை புனித வெற்றி அன்னை ஆலய பங்குத்தள கேட்போர் கூடத்தில் பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகள் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது.

தற்போது பேசாலையூடாக நாட்டை விட்டுச் செல்வோர் அதிகரித்துள்ள நிலையிலும், பேசாலை ஊடாக போதைப் பொருள்கள் கடத்தப்படுகின்றன என்று தெரிவிக்கப்படும் நிலையிலும், அவற்றைத் தடுக்கும் நோக்குடன் கடற்படையினர் பேசாலை பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகள் ஊடாக இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

பேசலை ஊடாக மேற்கொள்ளப்படும் சமூக விரோதச் செயங்பாடுகளை தடுத்த நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றும், இந்த விடயத்தில் மீனவர்கள் கடற்படையினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பாக மீனவர்கள் மற்றும் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தபோது, பேசாலை கடற்கரையோரத்தில் மின் அனல் காற்றாலை அமைக்கப்பட்டுள்ளதால் இந்தப் பகுதியில் மீன்பிடி குறைந்துள்ளது. இந்திய இழுவைப் படகுகளாலுமு் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றை ஈடு செய்ய முடியாது தவிப்போர், குறுக்கு வழியில் சம்பாதிக்க முயல்கின்றனர். இதுவே சமூக விரோத நடவடிக்கைகளுக்கு முக்கியமான காரணமாக அமைகின்றது.

சமூக விரோதச் செயற்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அவை தொடர்பாக தகவல் வழங்கிய சிறிது நேரத்திலேயே சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தத் தகவல் பகிரப்படுகின்றது. அதனால் பலர் தகவல் வழங்க அச்சப்படுகின்றனர் என்றனர்.

இந்தக் கலந்துரையாடலில் தலைமன்னார் கடற்படை முகாம் தளபதி குமார, மன்னார் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரி எஸ்.பவானி பேசாலை மீனவ சமூக பிரதிநிதிகள் அரசு அரசு சார்பற்ற பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Tags: கூட்டம்சமூகவிரோதச் செயல்தடுத்தல்பேசாலைமன்னார்
Previous Post

கோத்தாவுக்கு முண்டுகொடுக்கும் முரளிதரன்!! – மக்களின் போராட்டங்கள் தொடர்பில் சர்ச்சைக் கருத்து!!

Next Post

Amazon has 143 billion reasons to keep adding more perks to Prime

Next Post

Amazon has 143 billion reasons to keep adding more perks to Prime

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.