Monday, June 16, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

கோத்தாபய தலைமையில் விசேட பொருளாதார சபை!

March 9, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
கோத்தாபய தலைமையில் விசேட பொருளாதார சபை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் விசேட பொருளாதார சபையொன்று அமைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சரவைப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

பெருநிலைப் பொருளாதாரக் கொள்கை, கொரோனாப் பெருந்தொற்று நிலைமையின் பின்னர் தேசிய பொருளாதாரத்தின் செயற்பாடு, பொருளாதாரத்தை மீள்கட்டமைத்தல், அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய அபிவிருத்திக் கருத்திட்டங்கள் போன்ற உள்ளூர் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பாக மிகவும் ஆழமாகக் கலந்துரையாடி ஒட்டுமொத்த பொருளாதார முகாமைத்துவத்தை மேற்கொள்வதன் மூலம் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் நோக்கில் ‘பொருளாதாரப் பேரவை’ வாராந்தம் கூடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பேரவையின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய ஏற்புடைய அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் தேவையான சந்தர்ப்பங்களில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இயைபுடைய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவும், தேவைக்கேற்ப பொருளாதாரப் பேரவைக் கூட்டத்துக்கு போதுமான துறைசார் அறிவுகொண்ட கல்வியியலாளர்களை அழைக்கவும், ஜனாதிபதியால் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படும் படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவையின் உடன்பாட்டை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையிலான இந்தக் குழுவில், பிரதமர், வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத், திறைசேரி செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் தம்மிக்க நாணயக்கார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Tags: அமைச்சரவைஅரச தகவல் திணைக்களம்கோத்தாபய ராஜபக்சபொருளாதார சபைஜனாதிபதி
Previous Post

தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை!- ஒத்திவைத்த சிறைத்தண்டனையும் விதிப்பு!!

Next Post

தமிழ்க் கட்சிகளை இணைத்து அரசியல் தீர்வுக்கு நகருங்கள்!- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!!

Next Post
தமிழ்க் கட்சிகளை இணைத்து அரசியல் தீர்வுக்கு நகருங்கள்!- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!!

தமிழ்க் கட்சிகளை இணைத்து அரசியல் தீர்வுக்கு நகருங்கள்!- இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.