Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கர்தினாலின் கருத்தை மறுக்கிறார் கமால் குணரத்ன!

April 13, 2022
in இலங்கை
கர்தினாலின் கருத்தை மறுக்கிறார் கமால் குணரத்ன!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல் இருந்தால் அதைப் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க வேண்டும் என்று தான் எம்மால் கோரமுடியும். அவரின் பதவி நிலையை நாம் மதிக்கின்றோம்.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய வகையில் விசாரணை முன்னெடுக்கப்படவில்லை என பொறுப்பு வாய்ந்த பதவி நிலையில் இருப்பவர்கள்கூட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றோம்.

விசாரணைகள் முறையாக இடம்பெற்றன, இடம்பெற்றுவருகின்றன, இனியும் முறையாகவே இடம்பெறும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை 735 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 196 பேர் தடுப்பு காவலில் உள்ளனர். 81 பேருக்கு எதிராக மேல் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 493 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது பொலிஸ் காவலில் உள்ள நௌபர் மௌலவி என்பவரே, ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை இலங்கைக்கு கொண்டுவந்தார் என்றார்.

இலங்கை அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும், ஈஸ்டர் தாக்குதலை வைத்து சிலர் அடைந்த அரசியல் இலாபங்கள் நிலைக்காது எனவும் கர்தினால் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

Tags: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கமால் குணரத்னகருத்துபேராயர் கர்தினால்மல்கம் ரஞ்சித் ஆண்டகைமறுப்பு
Previous Post

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலகுமார் நேற்றுக் காலமானார்!!

Next Post

எரிபொருள் பதுக்கியதால் பறிபோனது ’லைசென்ஸ்’

Next Post
எரிபொருள் பதுக்கியதால் பறிபோனது ’லைசென்ஸ்’

எரிபொருள் பதுக்கியதால் பறிபோனது ’லைசென்ஸ்’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.