Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் வெடித்த வன்முறை!! – 8 பேர் உயிரிழப்பு!!-300 பேர் காயம்!!

May 10, 2022
in இலங்கை
இலங்கையில் வெடித்த வன்முறை!! – 8 பேர் உயிரிழப்பு!!-300 பேர் காயம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நேற்று வெடித்த வன்முறைச் சம்பவங்களில் ஆளுங்கட்சி எம்.யொருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 30 இற்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

“மைனாகோகம’, ‘கோட்டாகோகம’ அறவழி போராட்டக்காரர்கள்மீது ஆளுங்கட்சியின் நேற்று முற்பகல் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்தன.

அலரிமாளிகைக்கு வருகைதந்து, அதன் பிறகு போராட்டக்காரர்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்ட மொட்டு கட்சியின் உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க ஆதரவாளர்கள் உட்பட போராட்டக்காரர்கள்மீது, மக்கள் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். அவர்கள் பயணித்த வாகனங்களையும் சேதப்படுத்தினர்.

அதேவேளை, மெதமுலனவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தின் பூர்வீக இல்லமும் கொளுத்தப்பட்டது.

ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ரமேஷ் பத்திரண, விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, மொறட்டுவ மேயர், சனந் நிஷாந்த, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, திஸ்ஸ குட்டியாராச்சி உட்பட 30 இற்கும் மேற்பட்ட அரசியல் பிரமுகர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சொந்தமான சில ஹோட்டல்களும் நொறுக்கப்பட்டுள்ளன.

வாகனங்களும் எரியூட்டப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. அநுராதபுரத்தில் உள்ள மந்திரவாதியான ஞான அக்கா என்றழைக்கப்படும் ஞானவதியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான ஹோட்டலும் கொளுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமமீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.

ஊரடங்குக்கு மத்தியிலும் அலரிமாளிகைக்கு முன்பாக நேற்றிரவு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டக்காரர்கள் அலரிமாளிகைக்குள் நுழைவதற்கு முற்பட்டவேளை பதற்றம் ஏற்பட்டது. கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டது.

அதன்பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலரிமாளிகை சம்பவத்தில் 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஒரு உயிரிழப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் ஐவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர்.

கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் இன்று காலையே நிலைமை கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மஹிந்த ராஜபக்ச அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார்.

இதற்கிடையில் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத் தளபதி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைதியை கடைபிடிக்குமாறு சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட பல தரப்பினரும் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: அதிதீவிர சிகிச்சைப்பிரிவுஆளுங்கட்சி எம்.பிஇலங்கைஉயிரிழப்புவன்முறை
Previous Post

கலவரத்துக்கு காரணமான டி.ஐ.ஜி மீதும் தாக்குதல்!

Next Post

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த களமிறக்கப்பட்ட சிறைக்கைதிகள்!!

Next Post
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த களமிறக்கப்பட்ட சிறைக்கைதிகள்!!

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த களமிறக்கப்பட்ட சிறைக்கைதிகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.