Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

Operation Success: தமிழரசுக் கட்சி உடைந்து சிதறப்போகின்றது.. தமிழ் தேசியமும் சேர்ந்துதான்..

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

மு.கு: முகப்பில் இணைக்கப்பட்டுள்ள படத்துக்கும், கீழே குறிப்பிடப்படுகின்ற நபர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூடத்தை அடையாளப்படுத்துவதற்காக மட்டுமே கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் Thumbnail ஆகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தமிழரசுக் கட்சி உடைந்து சிதறுவதை யாராலும் தடுக்கமுடியாது என்று அச்சப்படும் அளவுக்கு, நிலமை மோசமான கட்டத்தை நோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றது என்பதை, நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் சுட்டிக்காண்பித்து நிற்கின்றன.பொதுவாகவே அரசியல்கட்சிகளின் மத்தியக்குழுக்கூட்டங்களில் வாதப்பிரதிவாதங்கள், இழுபறிகள், கருத்து முரண்பாடுகள் இடம்பெறுவது வளமைதான் என்றாலும், கட்சியை முடக்கும்படியான வழக்குகளை கட்சியின் பிரமுகர்களே திட்டமிட்டு தாக்கல்செய்வது, தெரிவுசெய்யப்பட்ட தலைவரை இயங்கவிடாமல் தடுப்பது, குறிப்பிட்ட சில பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்களை அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைக் கூறியே அவர்களைப் பேசவிடாமல் தடுப்பது, பிரதேசவாத வசைபாடல்கள்.. இவைகள் போன்றன, தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் பற்றிய கவலையை கட்சி உறுப்பினர்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.நேற்றைய தினம் நடைபெற்ற தமிழரசுக்கட்சி மத்தியகுழுக்கூட்டத்தில் இவை எல்லாமே நடைபெற்றன என்பதை சமூக ஊடகங்களின் வாயிலாகவும், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களின் ஊடாகவும் அறியக்கூடியதாக இருக்கின்றது.தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் (சிரேஷ்ட உறுப்பினர் என்றால் தமிழரசுக் கட்சிக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்டு தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அல்ல- கட்சியின் பாரம்பரியம் தெரிந்து நீண்டகாலமாக அந்தக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற ஒருவர்) எம்மிடம் தெரிவுக்கும் போது, ‘..தமிழரசுக் கட்சிக்கு முடிவுரை எழுவது என்று தீர்மானித்து விட்டானுகள்..’ என்று தெரிவித்தார்.“இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியையும், தமிழ் மக்களையும் தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு மலிவான விலையில் விற்பதற்கு சிலர் கங்கணம்கட்டி நிற்பது தெளிவாகத் தெரிகின்றது. எல்லாம் முடிந்துவிட்டது..” என்று கவலை வெளியிட்டார்.‘ஒரு சிலர் எதற்காக இறக்கப்பட்டார்களோ அவர்கள் தங்களுடைய பணியைச் சரியாகச் செய்துமுடித்துவிட்டார்கள். இனி தமிழரசுக் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் மிச்சம்..’ என்று கூறினார்.‘தமிழ் தேசியச் சிந்தனையோ, தமிழ் மக்கள் பற்றிய உண்மையான அக்கறையோ இல்லாத ஜென்மங்கள் இப்பொழுது தமிழரசுக் கட்சியின் முகம்களாக மாறிவிட்டதன் பலனை தமிழ் இனம் அனுபவிக்கத்தொடங்கிவிட்டது’ என்றும் அவர் ஆதங்கப்பட்டார். அத்தோடு, சில உறுப்பினர்கள் பிரதேசவாதக் குறியீடுகள் கூறப்பட்டு அந்த ‘இறக்குமதிகளினால்’ அவமதிக்கப்பட்டபோதும் கூட, அதனை தற்போதைய தலைவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தமிழரசுக் கட்சியின் அந்த சிரேஷ்ட உறுப்பினர் கவலை வெளியிட்டார்.

Previous Post

வரி தொடர்பான தகவல்கள் : நிதி இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததால் பிள்ளையானுக்கு ஏற்பட்ட வெட்கம்

Next Post
கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததால் பிள்ளையானுக்கு ஏற்பட்ட வெட்கம்

கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ததால் பிள்ளையானுக்கு ஏற்பட்ட வெட்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.