Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான நாடகமே இந்த ONPஅலுவலகம் – ஆ.லீலாதேவி.

August 20, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் கடந்த 12 ஆம் திகதி மிகவும் இரகசியமாக திறக்கப்பட்ட
காணாமற் போனோருக்கான அலுவலகம் எதிர்வரும் ஜெனீவாவை எதிர்கொள்வதற்கான ஒரு
நாடகமே என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்
அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை நாம் தொடர்ச்சியாக எதிர்த்தே
வந்துள்ளோம், இதனால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு
எவ்வித நீதியும் கிடைக்கப்போவதில்லை இதனை நாங்கள் அனுபவ ரீதியாக
உணர்ந்துள்ளோம். சர்வதேசம் ஓஎம்பி மீது மெல்லிய நம்பிக்கை
வைத்திருந்தது. எனவே நாம் ஓஎம்பியின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதற்காக
2019.07.20 அன்று பலத்த ஆதாரங்கள் உள்ள ஐந்து சம்வங்களை ஓஎம்பி
அலுவலகத்திற்கு வழங்கினோம் இதனை அப்போது தலைவராக இருந்த சாலிய பீரிசும்
ஏற்றுக்கொண்டு தீர்வினை தருவதாக கூறியிருந்தார். ஆனால் இன்று வரை
அவற்றுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை. இதன் மூலம் இந்த ஓஎம்பி
அலுவலகத்தினால் எதுவும் ஆகப்போதில்லை என்ற உண்மை அனைவருக்கும்
தெரியவந்தது.

இந்த நிலையில் தற்போது கொரேனா பரவல் காரணமாக ஒன்று கூடவோ, எதிர்ப்பு
போராட்டங்கள் நடத்தவோ, முடியாதவாறு சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும்
விதித்துவிட்டு இரகசியமாக கிளிநொச்சியில் ஓஎம்பி அலுவலகத்தை திறந்து
செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை
ஏற்படுத்தியிருக்கின்றது. யாருக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டதோ
அவர்கள் எவருக்கும் தெரியாது இதனை கிளிநொச்சியில் இரகசியமாக
மேற்கொண்டமைக்கான காரணம் என்ன? எனக் கேள்வி எழுப்பிய அவர்
சர்வதேசத்தையும், ஜெனீவாவையும் எதிர்கொள்வதற்காக அரசு போடும் நாடகமே இது
என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
அமைப்பாகிய நாம் எட்டு மாவட்டங்களின் உறவினர்களையும்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் எனவே நாம் கிளிநொச்சியில் இரகசியமாக
ஆரம்பிக்கப்பட்ட ஓஎம்பி ஆலுவலகத்தை எதிர்கின்றோம், இச் செயற்பாட்டை
வன்மையாக கண்டிக்கின்றோம். எனவும் தெரிவித்தார்.

Previous Post

இலங்கையில் இதுவரை 6,790 கொவிட் மரணங்கள், நேற்று மட்டும் 186 மரணங்கள் பதிவு

Next Post

“முடங்கியது கிளிநொச்சி நகரம்”

Next Post

"முடங்கியது கிளிநொச்சி நகரம்"

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.