Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்

September 26, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
எரிபொருள் குறித்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள பதில்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் தற்போது இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளனர்.

அமைச்சின் அதிகாரிகள் குழுவினருக்கு ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் போது, பொதுமக்களுக்கு தடையின்றி எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த இருப்புக்களை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி அநுர குமார, எதிர்வரும் வருடத்திற்கான எரிபொருள் கொள்வனவை திறம்பட திட்டமிடுமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார்.

அத்துடன், இந்த முயற்சிகளை எளிதாக்குவதற்கு தனது பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

முக்கியத்துவம்மேலும், 800 பிரிவேனாக்களுக்கு இந்திய உதவியின் மூலம் பெறப்பட்ட சோலார் பேனல்களை விநியோகிக்கும் திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி திஸாநாயக்க அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் படி, இம்முயற்சியை சுமுகமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக அமைச்சகத்திடம் இருந்து தெளிவான சாலை வரைபடம் தேவை என்றும் ஜனாதிபி அநுர குமார வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஏனைய வெளிநாட்டுக் கடன்கள் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்களை துரிதப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டு உதவித் திட்டங்கள்

வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கு மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு குழுவை நிறுவுவதற்கான திட்டங்களை அவர் அறிவித்தார், இந்த தீர்மானம் அவர்களின் செயல்பாட்டினை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது

இச்செயற்பாட்டின் ஊடாக, வெளிநாட்டு உதவிகளால் ஆதரிக்கப்படும் திட்டங்களை மிகவும் திறமையாக செயல்படுத்த முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால மற்றும் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டுள்ளனர்.  

Previous Post

“என் மீதான கொலை முயற்சிக்கு” ஈரான் தான் காரணம்: ட்ரம்ப் பகிரங்க குற்றச்சாட்டு

Next Post

விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை களவாடிய ஊழியர்

Next Post
விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை களவாடிய ஊழியர்

விமான நிலையத்தில் பயணிகளின் பொருட்களை களவாடிய ஊழியர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.