Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மில்லியன் கணக்கில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள விமல் வீரவன்ச

August 13, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மில்லியன் கணக்கில் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்துள்ள விமல் வீரவன்ச
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தனது நற்பெயருக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கானது நேற்றையதினம்(12) குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் இருவருக்கு எதிராகவே தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காரணமின்றி குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகவும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

வழக்குத் தாக்கல்

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வெளிநாடுகளில் நடைபெறவிருந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்தேன்.

இதன்போது, வெளிநாடு செல்வதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்கியதாகவும், அங்குள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் அதை சரிபார்த்து அது செயலற்ற கடவுச்சீட்டு என அறிவித்ததாகவும் முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் எவ்வித நியாயமான காரணமும் இன்றி கைது செய்து நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினார்

நற்பெயருக்கு களங்கம்

பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நியாயமான விசாரணை நடத்தாமல், தீங்கிழைக்கும் வகையில் கைது செய்து, வழக்குப்பதிவு செய்ததன் மூலம் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக பிரதிவாதிகளிடமிருந்து 1,000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

Previous Post

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயின் மரணம்: நீதி கேட்டு ஜனநாயக போராட்டத்துக்கு அழைப்பு

Next Post

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

Next Post
பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

பரீட்சையில் தோல்வியடைந்த தங்கையை துப்பாக்கியால் சுட்டுகொன்ற சகோதரர்! அதிர்ச்சி சம்பவம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.