Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரம் – இலங்கையர் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தகவல்

August 10, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
பிரித்தானியாவில் வெடித்துள்ள கலவரம் – இலங்கையர் தொடர்பில் உயர்ஸ்தானிகர் தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் (United Kingdom) நிலவும் அமைதியின்மை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) கேட்டறிந்ததாக பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அங்கு வாழும் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய – இலங்கையர் அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்களை இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த ரோஹித்த போகொல்லாகம அங்கு நிலவும் அமைதியின்மை நிலவரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இதுகுறித்து நாம் பிரித்தானியா அதிகாரிகளுடன் தொடர்ச்சியாகக் கலந்துரையாடி வருவதுடன், நாட்டில் மீண்டும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உத்தரவாதமளித்திருக்கிறோம் என உயர்ஸ்தானிகர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.

அத்தோடு பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அவதானத்துடன் செயற்படுமாறும், உள்நாட்டு செய்திகள் மற்றும் அரசினால் விடுக்கப்படும் அறிவிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று பிரித்தானியாவில் பல்லின, பல்கலாசாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 750,000 இலங்கையர்கள் வாழ்வதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியின்மைக்குக் காரணமானவர்

பிரித்தானியாவின் உரிய அதிகாரிகள் இந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின்முன் நிறுத்துவார்கள் என நான் உறுதியாக நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா வாழ் இலங்கையர்களை அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்துடன் நெருங்கிய தொடர்பைப் பேணுமாறும், அவசர உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் 1044 7475206220, 020 7262 1841 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாகவோ அல்லது mail@slhc-london.co.uk என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ உயர்ஸ்தானிகரகத்தைத் தொடர்புகொள்ளுமாறும் ரோஹித்த போகொல்லாகம கேட்டுக்கொண்டார். 

Previous Post

குரங்கு அம்மையின் புதிய திரிபு ; உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

Next Post

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Next Post
இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.