Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

July 31, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

அரசியலமைப்பில் உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு  இடமளிக்கப்பட்டிருந்தாலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன, தேசபந்து தென்னக்கோன் பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றுவதற்கு இடைக்காலத்தடைவிதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எவ்வித சட்டவலுவும் கிடையாது என்பதால் அதனை ஏற்கமுடியாது என குறிப்பிட்டார்.

அரசியலமைப்புப் பேரவை

மேலும், அரசியலமைப்புப் பேரவையின் அதிகாரத்தை நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனவும் தெரிவித்தார்.

அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பதில் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிப்பதிலிருந்து தான் விலகியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் அறிவித்தார்.

அதுமாத்திரமன்றி தேசபந்து தென்னக்கோன் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு முரணான கருத்துக்களையும் அவர் வெளியிட்டார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்நீதிமன்ற உத்தரவைப் புறந்தள்ளும் வகையிலான இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் அரசியலமைப்புப் பேரவையின் தீர்மானங்களை உயர்நீதிமன்றத்தினால் சவாலுக்கு உட்படுத்தமுடியாது எனக் குறிப்பிட்டார்.

அவரது இந்தக் கருத்து சரியானதெனின், அரசியலமைப்பைவிட அரசியலமைப்புப்பேரவை மேலோங்கியிருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.

பல்வேறு நெருக்கடிகள்

ஆனால் எந்தவொரு சட்டத்தினதும் அரசியலமைப்பு ஏற்புடைமை, அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கும் எந்தவொரு தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அரசியலமைப்பு ஏற்புடைமை என்பன தொடர்பில் இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளல் உயர்நீதிமன்றத்தின் கடமையாகும்.

இலங்கையின் அரசியலமைப்பானது அதிகாரப்பகிர்வுசார் கோட்பாடுகளை உறுதிப்படுத்தும் தொடர் பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது. எனவே அரசியலமைப்பின் அனைத்து சரத்துக்களும் அதிகாரப்பகிர்வு, சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக அடிப்படைக்கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு உட்பட்ட விதத்திலேயே பொருள்கோடல் செய்யப்படவேண்டும்.

அதேபோன்று உயர்நீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையான இடைக்காலத்துக்கு பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்பட்டிருப்பதுடன், பொலிஸ் சேவையில் ஈடுபடும் பெரும் எண்ணிக்கையானோரில் அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்ய முடியும். 

மாறாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டோர் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உயர்நீதிமன்றத்துக்கு எதிராகக் குழப்பம் விளைவிப்பதற்கு முற்படுவார்களேயானால், ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் நாட்டுக்கு மிகமோசமான சேதம் ஏற்படும்“ என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. 

Previous Post

ரணிலை புறக்கணிக்கும் மொட்டு கட்சி! காரணத்தை வெளியிட்ட சாகர

Next Post

கொழும்பை அதிரவைக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

Next Post
கொழும்பை அதிரவைக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

கொழும்பை அதிரவைக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.