Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் : ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்

July 28, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1700 ரூபா சம்பளம் : ஹட்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1700 ரூபா உடன் வழங்குமாறு கோரி ஹட்டனில் (Hatton) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (28) பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன், எம்.உதயகுமார், எம்.வேலுகுமார், முன்னாள் மாகாண உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

கறுப்புக் கொடி

மலையக பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமை, சம்பள உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பன இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன் தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீள பெறப்பட்டமை தொடர்பிலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

இதனடிப்படையில்,  கலந்து கொண்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததுடன் ஹட்டனில் உள்ள சில கடைகளிலும் மற்றும் முச்சக்கரவண்டிகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாபெரும் போராட்டம்

ஹட்டன் நகர புட்சிட்டி பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்து ஹட்டன் பிரதான நகர் வழியாக பேரணியானது மணிக்கூட்டு கோபுரத்தை சென்றடைந்ததுள்ளது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலகத் தடுப்பு பிரிவினரும், நீர் தாரை பிரயோக வாகனமும் மற்றும் ஹட்டன் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டதுடன் ஹட்டன் காவல் பிரிவிற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் பெருந்தொகையான காவல் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்ததோடு இந்த போராட்டம் காரணமாக ஹட்டன் நகரில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தொடருந்து சுரங்கங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

Next Post

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி: வைத்திய அத்தியட்சகர் தகவல்

Next Post
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி: வைத்திய அத்தியட்சகர் தகவல்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்தடைந்த நிரந்தர மின் பிறப்பாக்கி: வைத்திய அத்தியட்சகர் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.