Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கறுப்பு ஜீலை கலவரம்…41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு

July 24, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கறுப்பு ஜீலை கலவரம்…41 வருடங்கள் கடந்தும் தீர்வு கிடைக்கவில்லை : வசந்த முதலிகே சுட்டிக்காட்டு
0
SHARES
Share on FacebookShare on Twitter

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜீலை(Black July) கலவரத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 41 வருடங்கள் கடந்தும் மக்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் போராட்ட முன்னணியின் தலைவர் வசந்த முதலிகே (Wasantha Mudalige) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் அரசியல் வாதிகள் இழுத்தடிக்கின்றனர் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்றைய தினம் (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கறுப்பு உடை இனக்கலவரம்

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் உள்ள இந்த வளங்கள் விற்கப்படுகின்றன. மக்கள் அன்றாடம் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதில் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.

இந்த அரசாங்கம் மக்கள் தொடர்பில் எந்தவித கரிசனையும் கொள்வதில்லை. மாறாக இவர்கள் மக்களை துன்பத்துக்கு ஆளாக்குவதிலும் எமது நாட்டின் வளங்களை அந்நிய சக்திகளுக்கு விற்பனை செய்வதிலே முனைப்பு காட்டி வருகின்றனர். நாங்கள் மக்களுக்காகவே போராடுகின்றோம் மக்கள் நலன் சார்ந்தே நாங்கள் செயற்படுகின்றோம்.

1983 ஆம் ஆண்டு கறுப்பு உடை இனக்கலவரம் கொழும்பில் இடம் பெற்ற பொழுது தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்று 41 வருடங்கள் கடந்துள்ளன.

ஒடுக்கி ஆளப்படும் தமிழ் மக்கள் 

மக்களுக்கான தீர்வு இந்த அரசாங்கத்தினால் சரி இந்த சிங்கள அரசியல்வாதிகளினாலோ தமிழ் மக்களுக்கு வழங்கப்படவில்லை. மாறாக தமிழ் மக்கள் ஒடுக்கி ஆளப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

இந்த நாட்டின் பிரச்சினை இனங்களுக்கு இடையிலான சமரசங்கள் தீர்த்து வைக்கப்படவில்லை. மாறாக இனம், மதம் மொழி என்ற பாகுபாடுகளை மக்களுக்குள் திணித்து அதன் மூலம் அரசியல் இலாபத்தையே இந்த அரசியல்வாதிகள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மேற்கொண்டு வருகின்றனர்.

இனங்களைப் பிரித்து மதங்களைப் பிரித்து அதனூடாக குளிர் காய்ந்த அரசியல்வாதிகள் தங்கள் பொக்கட்டுகளை நிரப்பவே இந்த நாடாளுமன்றத்தை அலங்கரித்தனர்.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை புகுத்தி அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வினை வழங்காமல் பல வருடங்களாக இவர்கள் இழுத்தடிப்பு செய்தனர்.” என வசந்த முதலிகே தெரிவித்தார்.

Previous Post

புதிய பிரதமரின் அதிரடி நடவடிக்கை:பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

Next Post

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் பலி

Next Post
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் பலி

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து : பரிதாபமாக ஒருவர் பலி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.