Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் விடயம்: ரணிலை புகழும் அமைச்சர்

July 18, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
அரச ஊழியர்களின் சம்பளம் விடயம்: ரணிலை புகழும் அமைச்சர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரச ஊழியருக்கும் சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் குறைவின்றி வழங்கியமை பெரு வெற்றியாகும் என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதற்காக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) வழங்கிய அறிவுரைகள் பக்கபலமாக அமைந்திருந்தாகவும் அசோக பிரியந்த (Ashoka Priyantha) குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ஊடக மையத்தில் புதன்கிழமை (17.7.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி

இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ”கடந்த இரு வருடங்கள் மிகக் கஷ்டமாக அமைந்தது. நாம் கொரோனா, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தையும் கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டியிருந்தது

சம்பளமும், கொடுப்பனவுகளும் நிறுத்தப்படலாம் என்றும் சிலர் சிந்தித்தனர். அரசாங்க சேவை முடங்கிவிடும் என்றும் நினைத்தனர்.

ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைய அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் (Dinesh Gunawardena) வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகள் காரணமாக அரச சேவையைப் பாதுகாக்க முடிந்தது.

நாட்டு மக்களின் பங்களிப்பு

இது மிகப்பெரிய வெற்றியாகும். அதற்கு அரச ஊழியர்கள் மற்றும் நாட்டு மக்களின் முழுமையான பங்களிப்பு கிடைத்திருந்தது என்பதையும் நினைவுகூற வேண்டும்.

தேர்தல் பற்றி இன்று பலர் பல இடங்களில் பேசினாலும் அதற்கு தகுந்த சூழலை உருவாக்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அர்பணித்துள்ளது என்பதையும் நினைவுபடுத்த வேண்டும் என உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

Previous Post

கனடாவில் 19 பேர் அதிரடியாக கைது: காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

Next Post

கனடாவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

Next Post
கனடாவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

கனடாவில் கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.