Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் : பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது சிறுமி

July 18, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மகளை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் : பரிதாபமாக உயிரிழந்த நான்கு வயது சிறுமி
0
SHARES
Share on FacebookShare on Twitter

கேகாலை (Kegalle) ருவன்வெல்ல பிரதேசத்தில்  உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

யட்டியந்தோட்டை கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற நான்கு வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

ருவன்வெல்ல காவல் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கிணற்றொன்றில் நேற்றைய தினம் (17)  நான்கு வயது சிறுமியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன் கிணற்றின் அருகில் குழந்தையின் தாயார்  மயங்கி கிடந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த சிறுமி

இந்தநிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனடிப்படையில், இந்த சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இரவு 11.00 மணிக்கும் மற்றும் மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலைக்கான காரணம் 

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயாரே சிறுமியை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன் அவர் சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில் ருவன்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நாட்டை விட்டு தப்பிச்சென்று வெளிநாடுகளில் மறைந்திருக்கும் குற்றவாளிகள் : வெளியான தகவல்

Next Post

மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்…! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

Next Post

மின்பிறப்பாக்கி விவகாரம்: தமிழ் அரசியல்வாதிகளால் வஞ்சிக்கப்பட்டேன்...! சாடும் வைத்தியர் அர்ச்சுனா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.