Thursday, May 15, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home கனடா

தண்டனை போதாது: இந்தியரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருத்தம்

June 1, 2024
in கனடா, முக்கியச் செய்திகள்
தண்டனை போதாது: இந்தியரால் ஏமாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் வருத்தம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

700 இந்திய மாணவர்களை ஏமாற்றிய நபர்
இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள்.

அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து, நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கோரி விண்ணப்பிக்கும்போது அவர்களுடைய அனுமதி ஆஃபர் கடிதங்கள் (admission offer letters) போலியானவை என தெரியவந்ததையடுத்து, அவர்கள் நாடுகடத்தப்படும் நிலை உருவாயிற்று.
மோசடி நபருக்கு குறைவான தண்டனை
இந்நிலையில், சுற்றுலா விசாவில் கனடா வந்த மிஸ்ராவை 2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கனேடிய பொலிசார் கைது செய்தார்கள். அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஏமாற்றம்
மிஸ்ராவுக்கு வெறும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதால், அவரால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

மிஸ்ராவால் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படும் நிலை உருவானது. ஆனால், இப்போது அவர்களில் சிலருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிகளும், நீண்ட கால பணி அனுமதிகளும் வழங்கப்படும் வகையில் நிலைமை மாறியிருந்தாலும், தங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்திய மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட தண்டனை மிகவும் குறைவு என அவர்கள் கருதுகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான Ravinderpreet Singh(28) என்னும் இந்திய மாணவர் கூறும்போது, மிஸ்ராவால் என் வாழ்வில் பல ஆண்டுகள் வீணாகிப்போயின, மன அழுத்தத்தையும் பணப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டேன், அவருக்கு தண்டனை கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சி, ஆனால், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கூறியுள்ளார்.

இந்த இந்திய மாணவர்களுக்காக வழக்காடிய ரொரன்றோவை மையமாகக் கொண்ட புலம்பெயர்தல் சட்டத்தரணியான Sumit Sen என்பவர் கூறும்போது, மிஸ்ராவுக்கு குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையாவது விதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், மிஸ்ராவுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டதால், இனி அவர் 19 மாதங்கள் மட்டும் சிறையில் செலவிட்டால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

49 பெண்கள்… பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூரம்: கனடாவை நடுங்கவைத்த நபர் குறித்த புதிய தகவல்

Next Post

கனேடிய பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பு., IRCC வெளியிட்ட அறிக்கை

Next Post
கனேடிய பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பு., IRCC வெளியிட்ட அறிக்கை

கனேடிய பொருளாதாரத்தில் புலம்பெயர்ந்தோரின் பெரும் பங்களிப்பு., IRCC வெளியிட்ட அறிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.