Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை!

May 9, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு எச்சரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏறக்குறைய இரண்டாயிரம் குழந்தைகள் பீட்டா தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தலசீமியா நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஈ. எம் ரஞ்சனி எத்ரிசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச தலசீமியா தினத்தை முன்னிட்டு நேற்று (08) கொழும்பு சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விசேட வைத்தியர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தலசீமியா ஹீமோகுளோபின் உற்பத்தியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் மரபணு மாற்றத்தால் ஏற்படும் நோய் என்பதால், குழந்தைகளுக்கு அதிக அளவு இரத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சை

தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான செலவு சுகாதார அமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையை தடுப்பதற்கு நாட்டில் தலசீமியா பிரசவங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, தலசீமியா கேரியர் நிலையை முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் தலசீமியா மேஜர் கொண்ட குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

திருமணத்திற்கு முன் பரிசோதனை

இந்த ஆண்டு சர்வதேச தலசீமியா தினத்தின் கருப்பொருள் “உயிர்களை மேம்படுத்துதல், முன்னேற்றத்தைத் தழுவுதல், தலசீமியா சிகிச்சையை நியாயமானதாகவும், அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல்” என்பதாகும்.

மேலும், திருமணத்திற்கு முன் அனைவருக்கும் தலசீமியா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதிப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு கிடைக்க போகும் சிறப்பு சலுகை

Next Post

கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Next Post
கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கோடிக்கணக்கான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.