Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

செங்கடலில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள்

January 29, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
செங்கடலில் பாதுகாப்பற்ற நிலை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அண்மைக்காலமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை மற்றும் துறைமுகத்தின் செயற்பாடுகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் (2024) ஜனவரி மாதத்தில் மட்டும் துறைமுகத்திற்கு வருகை தந்த சர்வதேச கப்பல்களின் எண்ணிக்கை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது.

கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
செங்கடலில் நிலவும் மோதல்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

செங்கடலைச் சுற்றியுள்ள பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக கப்பல் நிறுவனங்கள் தங்கள் கப்பல் சேவைகளை கொழும்பு துறைமுகத்திற்கு பாதுகாப்பு நடவடிக்கையாக நகர்த்தியுள்ளனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் கொழும்பு துறைமுகத்தை நோக்கி வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இந்நிலையில் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தில் 24 கப்பல்கள் நங்கூரமிட்டிருந்த நிலையில் துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிடுவதற்காக காத்திருந்த கப்பல்களின் எண்ணிக்கை 06ஆக காணப்பட்டுள்ளன.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே வலுக்கும் போரின் காரணமாக ஹமாஸிற்கு ஆதரவாக தமது நிலைப்பாட்டை ஈரானிலுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஹவுதியின் அட்டூழியத்தால் இலங்கைக்கு படையெடுக்கும் கப்பல்கள் அதன்பொருட்டுஇ செங்கடல் அரபிக்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியினூடாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தி வருவதால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

Next Post

யாழ் மாவட்டத்திற்கு புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்

Next Post
யாழ் மாவட்டத்திற்கு புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்

யாழ் மாவட்டத்திற்கு புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.