Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

பியர் குடித்து திடீரென உயிரிழந்த இளைஞன்!

April 6, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
பியர் குடித்து திடீரென உயிரிழந்த இளைஞன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நியூசிலாந்தில் பியர் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தை சேர்ந்த எய்டன் சாகலா என்ற நபர் கடந்த மார்ச் 7ம் திகதி பியர் குடித்த பின் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்தார்.

சாகலாவின் மரணத்தால் தூண்டப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கலந்த பியர் கேன்களின் பலகைகளில் கொம்புச்சா போத்தல்களும் இருந்துள்ளன.

அங்கு அதிகாரிகள் இதுவரை 328 கிலோ மெத்தாம்பேட்டமைனை என்ற போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த மார்ச் 16ம் திகதி அன்று ஆயுதமேந்திய பொலிஸ் அதிகாரிகள் மனுகாவில் உள்ள ரியான் பிளேஸில் உள்ள ஒரு கிடங்கை முற்றுகையிட்டனர்.

அப்போது ஹனி பியர் ஹவுஸ் பியர் கேன்களின் பலவற்றிலும் மெத் கலக்கப்படுவதை கண்டுபிடித்து கைப்பற்றினர். தொழிற் சாலையிலிருந்து கால் டன்னுக்கும் அதிகமான மெத்தை படிக வடிவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் மீட்டெடுக்கப்பட்ட திரவ வடிவிலான மெத் பற்றி பகுப்பாய்வு செய்து வருகிறார்கள். சகாலா பியர் குடித்த அன்று நடந்தவற்றை பற்றி விவரங்களை அவரது சகோதரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மருத்துவராக பணிபுரியும் ஏஞ்சலா என்பவரோடு அவரது சகோதரரான சகாலா வசித்து வந்துள்ளார். அவரது வீட்டிலிருந்து கொண்டே வேலைக்குப் போய்க் கொண்டிருந்த சகாலா அன்று கொஞ்சம் தாமதாக வீட்டிற்கு வந்துள்ளார்.

தன்னுடன் பணிபுரிபவர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்றதன் பேரில் அவரும் சென்றுள்ளார்.

அதுவரை பியர் குடித்து பழக்கமில்லாத சகாலா அன்று பியர் குடித்திருக்கிறார். பின்னர் தாமதாக வீடு வந்த சகாலாவை வீட்டில் இருக்க சொல்லிவிட்டு ஏஞ்சலா கடைக்கு சென்றுள்ளார்.

அதற்குள் ஏஞ்சலாவின் கணவர் சத்தம் போட மீண்டும் வீட்டுக்கு வந்த அவர் தனது சகோதரன் உடல் நடுங்கிக் கொண்டு கிடந்ததை பார்க்கிறாள். சகாலா வலிப்பு வந்ததை போல் துடிதுடித்து கொண்டிருந்த சமயத்தில் “நான் இறப்பதை போல உணர்கிறேன்” என கூறியுள்ளார்.

பின்னர் அவருக்கு முதலுதவி செய்த ஏஞ்சலா பின்னர் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags: #Beer#DrinkingBeer#NewZealand#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

குற்றச் செயல்கள் குறித்து கனேடியப் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

Next Post

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

Next Post
நாடாளுமன்றில் கடும் கோபத்தை வெளிப்படுத்திய ரணில்!

உத்தியோகபூர்வ முகநூல் கணக்கை மறந்த ஜனாதிபதி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.