இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரே நம்பிக்கையாக சர்வதேச நாணயநிதியம் மாத்திரம் காணப்படுகின்றது என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுச ராமநாயக்கவுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
சர்வதேச நாணய நிதியத்துடனான பொருளாதார மீட்சி திட்டமே இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒரேவழியாக காணப்படுகின்றது. வேறு எவரும் இலங்கையை மீட்பதற்கு உதவத் தயாரில்லை.
முன்கூட்டியே செயற்பட்டிருந்தால் நாங்கள் வேறு விடயங்களை முயற்சித்துப் பார்த்திருக்கலாம். அந்நியச் செலாவணி கையிருப்பு வங்குறோத்து நிலையை அடைந்திருக்கும் நிலையில் எவரும் எமக்குக் கடன் தருவதற்குத் தயராக இல்லை. ஒரே ஒரு நம்பிக்கையாக சர்வதேச நாணய நிதியமே இருக்கின்றது.- என்றார்.
Discussion about this post