Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஏப்.21 தாக்குதல் சம்பவம் ஜனாதிபதி அவதானம்

October 5, 2022
in இலங்கை
ஏப்.21 தாக்குதல் சம்பவம் ஜனாதிபதி அவதானம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குல் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச விசாரணை நிறுவனங்களின் முழுமையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார். நீதிமன்ற நடவடிக்கையின் ஊடாகவே தண்டனை வழங்க முடியும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்களின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களான சமிந்த விஜேயசிறி மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் விசாரணை அறிக்கையை மறைப்பதற்கும், குற்றவாளிகளை பாதுகாப்பதற்கும் வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்கு 66 ஆயிரம் பக்கங்களை கொண்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணிகளின் நிமித்தம் ஆணைக்குழுவின் ஒருசில விடயங்களை பகிரங்கப்படுத்த முடியாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கத்தை செயற்படுத்துவதற்காக அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டது. உப குழுவின் பரிந்துரைக்கமைய அறிக்கையின் பல விடயங்கள் தற்போதும் நிறுவன மட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு நேரடியாகவும்,மறைமுகமாகவும் தொடர்புடைய தரப்பினர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். விசாரணைகள் தாமதப்படுத்தப்படவுமில்லை, மூடி மறைக்கப்படவுமில்லை.

மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படும் தகவல் உத்தியோகப்பூர்வமற்றதாகும். இந்த விடயம் தொடர்பாக அவதானம் செலுத்தப்படும். கர்தினாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்.- என்றார்.

Previous Post

வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாச்சிக்குடா மக்கள் கவனவீர்ப்பு

Next Post

வன்முறைகளைத் தடுக்க புதிய சட்டம் தயாரிக்கும் சிறிலங்கா

Next Post
வன்முறைகளைத் தடுக்க புதிய சட்டம் தயாரிக்கும் சிறிலங்கா

வன்முறைகளைத் தடுக்க புதிய சட்டம் தயாரிக்கும் சிறிலங்கா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.