Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் – சுமந்திரன் எம்.பி. கடும் கண்டனம்

August 22, 2022
in இலங்கை
பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் – சுமந்திரன் எம்.பி. கடும் கண்டனம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும்.

எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்-

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் மீது மாத்திரம் பயங்கரவாதத் தடை சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏனையோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகிப்பதை நிறுத்தியுள்ளதாக வாக்குறுதியளித்துள்ள அரசாங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காலாவதியாகியுள்ள நீக்கப்பட்டிருக்க வேண்டிய அதனை மீளவும் பிரயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.

இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையாகும்.

அதற்காக தண்டனை கூட வழங்க முடியாது. அவ்வாறிருக்க பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை 3 மாதங்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான நடவடிக்கை மிகவும் வருந்தக் கூடிய விடயமாகும்.

அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இது தொடர்பில் பதில் கூற வேண்டும். அத்தோடு இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதே போன்று பயங்கரவாத தடைச் சட்டமும் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்றார்.

Tags: அரச அடக்குமுறைஇலங்கைஎம்.ஏ.சுமந்திரன்பயங்கரவாதத் தடைச் சட்டம்பல்கலைக் கழக மாணவர்கள்
Previous Post

மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிக்கக் கோரிக்கை

Next Post

சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு ஐ.நாவிலிருந்து எழுந்த கண்டனம்

Next Post
சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு ஐ.நாவிலிருந்து எழுந்த கண்டனம்

சிறிலங்காவின் செயற்பாட்டுக்கு ஐ.நாவிலிருந்து எழுந்த கண்டனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.