உலகளாவிய ரீதியில் தற்போது வேகமாகப் பரவும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று இலங்கையிலும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத், இது தொடர்பில் சுகாதாரத் திணைக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன என்று தெரிவித்தார்.
வைரஸ் பரவல் மற்றும் ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார திணைக்களங்கள் தற்போது ஆய்வு செய்து வருகின்றன.
இலங்கையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி பதிவாகும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கைகள் மற்றும் தேவையான வசதிகளை சுகாதார அமைச்சு ஏற்கனவே தயாரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.
Discussion about this post