Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பிரசன்ன ரணதுங்க எம்.பிக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!

July 10, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
பிரசன்ன ரணதுங்க எம்.பிக்களுக்கு விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

எமது நாடு வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளது. நாடு இந்த அவல நிலைக்கு ஆளாகியதற்கு இந்த நாட்டை 74 ஆண்டுகள் ஆண்ட அனைத்து ஆட்சியாளர்களுமே காரணம். தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதுடன், மக்கள் நம்பும் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு தேவையான இடத்தை வழங்குவதும் எமது பொறுப்பாகும்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு திறமையற்ற நிர்வாகமே பிரதான காரணமாகும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், 69 இலட்சம் ஆணை பெற்று தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியை, பதவியை விட்டு வெளியேறுவதற்கு மக்களின் பலம் தாக்கம் செலுத்தியுள்ளது.

மக்களின் கருத்துக்கு தலைவணங்கி இம்மாதம் பதின்மூன்றாம் திகதி தனது பதவியை விட்டு வெளியேறுவேன் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்த தருணத்தில் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களின் பொறுப்பு மக்கள் நம்பாத போலி அறிவிப்புக்களை வழங்கக்கூடாது.

தற்போது மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதுடன், மக்கள் நம்பும் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு தேவையான இடத்தை வழங்குவதும் எமது பொறுப்பாகும். அதற்கு தலைமை தாங்குவது நாடாளுமன்றத்தில் உள்ள 225 மக்கள் பிரதிநிதிகளினதும் தவிர்க்க முடியாத கடமையும் பொறுப்புமாகும்.

மக்கள் கேட்கும் சர்வகட்சி இடைக்கால அரசுக்கு இடம் கொடுப்பதே இந்த தருணத்தில் எங்களின் கடமையாகும். எண்ணெய், எரிவாயு, என அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்க அனைத்து கட்சி இடைக்கால அரசுக்கு உறுதுணையாக இருக்கும்.

தற்போது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கும் எரிபொருள், உரம், மின்சாரம், அத்தியாவசிய உணவு, பிரச்சினைகளைத் தீர்த்து, மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்றார்.

Tags: இலங்கைநாடாளுமன்ற உறுப்பினர்பிரசன்ன ரணதுங்கமுக்கிய வேண்டுகோள்
Previous Post

அமைச்சுப் பதவியிலிருந்து விலகிய தம்மிக்க பெரேரா!!

Next Post

ரணில் வீட்டுக்குத் தீ!!- சர்வதேச நாடுகளும் கண்டனம்!!

Next Post
ரணில் விக்கிரமசிங்கவின் வீடு ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிட்டு எரிப்பு!

ரணில் வீட்டுக்குத் தீ!!- சர்வதேச நாடுகளும் கண்டனம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.