Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

பதவிகளில் இருப்பவர்களே உதவி தடைப்பட காரணம்!- ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு!

July 4, 2022
in இலங்கை
பதவிகளில் இருப்பவர்களே உதவி தடைப்பட காரணம்!- ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்க டொலரை அள்ளிக் கொடுக்கப் பல அரபு நாடுகள் தயாராகவே இருக்கின்றன. ஆனால் எமது நாட்டில் உள்ள தலைமைத்துவங்களுக்கு உதவி செய்ய அவர்கள் தயாராக இல்லை. ஒருவருடைய பதவியை விடவும் நாட்டில் வாழும் இரண்டு கோடி மக்களின் வாழ்வு, எதிர்காலம் என்பவையே முக்கியம்.

இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.எம்.ஏ. ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடனுக்கு மேல் கடன் – கடனுக்கு வட்டி வேறு. இந்திய அரசு பெற்றோலை ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்து 40 வீத இலாபத்தை வைத்து நமது நாட்டுக்கு தருகிறார்கள்.

உதாரணமாக 500 மில்லியன் டொலரைத் தந்துவிட்டு ஆயிரம் தொடக்கம் 2 ஆயிரம் மில்லியன் டொலர் பெறுமதியான இலங்கையின் சொத்தை எழுதி வாங்கிக்கொள்கிறார்கள்.

இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கும் ஒவ்வொரு நாளும் எமது நாடு பயங்கரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போது நாங்கள் அனுபவித்துக்கொண்டிருப்பதல்ல கஷ்டம். இனித்தான் நாம் அதிக கஷ்டங்களை அனுபவிக்க போகின்றோம். இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு இந்த அரசாங்கம் தொடர்ந்தால் விளைவு மிகமோசமாக இருக்கும்.

இந்த அரசாங்கம் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக பதவிகளில் இருந்து விலகி, இந்த நாட்டை கட்டியெழுப்பும் திறமையானவர்களிடம் நாட்டை கையளித்துவிட்டு ஒதுங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் எமது நாட்டின் ஆட்சியாளர்கள் அதிகாரத்திலிருந்து ஒதுங்கும் வரை இலங்கைக்கு உதவ முன்வராது என்றார்.

Tags: அமெரிக்க டொலர்உதவி தடைப்படல்காத்தான்குடிகாரணம்பதவியில் இருப்பவர்கள்ஹிஸ்புல்லாஹ்
Previous Post

கோத்தாபயவுக்கு 7ஆம் திகதிவரை காலக்கெடு விதித்த தேரர்கள்!!

Next Post

சர்வ கட்சி அரசை அமைக்க உடன் நடவடிக்கை எடுங்கள்!- நாடாளுமன்றத்தில் அழுத்தம்!

Next Post
21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி!!

சர்வ கட்சி அரசை அமைக்க உடன் நடவடிக்கை எடுங்கள்!- நாடாளுமன்றத்தில் அழுத்தம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.