சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
இந்தக் குழு எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இங்கு தங்கியிருந்து ஊழியர் மட்ட உடன்படிக்கையை எட்டுவதற்கு சிறிலங்கா அதிகாரிகளுடன் தொடர்ந்து கலந்துரையாடும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 9ஆம் திகதி முதல் கடந்த மாதம் 24ஆம் திகதிவரை நடந்த மெய்நிகர் கலந்துரையாடலில் எட்டப்பட்ட முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கும் ஏற்பாட்டின் மூலம் ஆதரிக்கப்படக்கூடிய பொருளாதார வேலைத் திட்டம் பற்றிய விவாதங்கள் தொடரும் என்று சிறிலங்காவுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் குழு தெரிவித்துள்ளது.
Discussion about this post