Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

260 கோடியுடன் வங்கிக்கு சென்ற தமிழர்!

October 8, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
260 கோடியுடன் வங்கிக்கு சென்ற தமிழர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒருவர் 260 கோடியுடன் வங்கிக்கு சென்ற சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியடைந்த
பொலிஸார், அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக சர்வதேச ஊடகங்கள்
தெரிவித்துள்ளன.

பெருந்தொகை பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து வங்கியில் வைப்பிலிட்ட சம்பவம் வெளிப்பட்டதை
தொடர்ந்து, குறித்த தமிழரான சுஜிகரன் தம்பிராஜா அங்கு குற்றவியல் விசாரணையை எதிர்கொண்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சாதாரணமான நபரான அவர், இவ்வளவு பெருந்தொகை பணத்தை எப்படி வைப்பிலிட
முடிந்தது என, பொலிசார் இது பற்றி விசாரித்து வருகிறார்கள்.

அவர் 8 மில்லியன் அமெரிக்க டொலரை ( 259,18,92,000.00 இலங்கை ரூபா) வங்கியில் வைப்பிலிட்டுள்ளார். அவர்
பணம் வைப்பிலிட்டதை கண்காணித்த அவுஸ்திரேலியாவின் இரகசிய பொலிசார், அவர் பெருந்தொகை பணத்தை
வைப்பிலிடும் காட்சிகளை இரகசியமாக காணொளியாக பதிவு செய்துள்ளனர்.

2022 குளிர்காலத்தில் அவுஸ்திரேலிய பெடரல் காவல்துறையின் இரகசிய கண்காணிப்புக் குழுக்களால் சிட்னியின்
மேற்குப் பகுதியில் அவர் பின்தொடரப்பட்டுள்ளார்.

எனினும் தன்னை பொலிசார் பின்தொடர்வதை அறியாக அவர் , ஜூன் 2022 இல் இரண்டு வங்கிகளில் 8 மில்லியன்
டொலர் பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.

ஒரு வெஸ்ட்பேக் கிளையின் உள்ளே, 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பெரிய மூட்டைகளைக் கொடுப்பதை
புலனாய்வாளர்கள் கண்டறிந்தனர். அதன் பின்னர் அவர் சுஜிகரன் தம்பிராஜா மற்றொரு இடமான சென்ட் ஜோர்ஜ்
வின்ஸ்டன் ஹில்ஸ் கிளையில் அதிக பணத்தை ஒப்படைத்தார்

இதன்போது, குறித்த நபர் தனது போனில் 34,400 டொலர் என்று கணக்கிடுவதை இரகசிய பொலிசாரின் கமரா படம்
பிடித்தது. இந்த பெரிய தொகையானது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் பெறப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம் குறித்த தமிழர் பணமோசடி அல்லது வேறு முறைகேடான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டால்,
கடுமையான சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.

Tags: #Police Shocked#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Went Bank
Previous Post

இலங்கைக்குள் ஊடுருவிய கொலைகார சொம்பி

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்

Next Post
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பதாக அறிவித்த பிரபல வர்த்தகர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.