Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

22 மாணவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது சிறுமி

August 12, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
22 மாணவர்களால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயது சிறுமி
0
SHARES
Share on FacebookShare on Twitter

மொனராகலை (Moneragala) மாவட்டம் தனமல்வில பகுதியில் 16 வயதான சிறுமி ஒருவர் 22 பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை அரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சில மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ள நிலையில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்படுவதற்கு முன்னர் தனக்கு பலவந்தமாக மதுபானத்தை வழங்கியதாக குறித்த சிறுமி காவல்துறையினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தான் கல்வி பயிலும் பாடசாலையிலுள்ள 19 வயதான மாணவனொருவனை சிறுமி காதலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் தனது காதலனின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு பாடசாலை மாணவர்களினால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கர்ப்பமடைந்த சிறுமி 

இந்தநிலையில், சிறுமி குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்துள்ள சந்தேகநபர்கள் அந்த காணொளியை வெளியிடுவதாக அச்சுறுத்தி ஒரு வருட காலம் சிறுமியை பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

மேலும், சிறுமி காதலித்த மாணவன் உள்ளிட்ட மேலும் 21 மாணவர்கள் குறித்த சிறுமியை  வன்புணர்வுக்கு உட்படத்தியுள்ள நிலையில் சிறுமி கர்ப்பமடைந்தமையினால் ராகமை வைத்தியசாலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சிறுமி கர்ப்பமடைந்ததை அறிந்துக்கொண்ட பெற்றோர்கள், சிறுமியை ராகமையிலுள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்பியுள்ளதோடு சிறுமி குழந்தை பெற்றெடுத்ததை அடுத்து ராகமை வைத்தியசாலை நிர்வாகத்தினால் புத்தல காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விசாரணைகளை ஆரம்பித்த புத்தல காவல்துறையினர், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உச்சமடையும் போர்க்களம்: இலங்கை இராணுவ வீரர்கள் உக்ரைனால் அதிகாரிகளால் கைது

Next Post

ஜனாதிபதி போட்டியில் இருந்து ரணில் விலக வேண்டும்! விஜயதாச ராஜபக்ச முன்வைத்துள்ள காரணம்

Next Post
ஜனாதிபதி போட்டியில் இருந்து ரணில் விலக வேண்டும்! விஜயதாச ராஜபக்ச முன்வைத்துள்ள காரணம்

ஜனாதிபதி போட்டியில் இருந்து ரணில் விலக வேண்டும்! விஜயதாச ராஜபக்ச முன்வைத்துள்ள காரணம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.