Monday, May 12, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

2024 இல் நடக்கப்போகும் மாற்றம் குறித்து அச்சம் தரும் கணிப்பு

November 27, 2023
in உலகம், முக்கியச் செய்திகள்
2024 இல் நடக்கப்போகும் மாற்றம் குறித்து அச்சம் தரும் கணிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

பிறக்க இருக்கும் 2024 ஆம் ஆண்டில் உலகில் நடக்கப்போவது என்ன என்பது தொடர்பாக தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் அதிர வைத்துள்ளன.

இதன்படி புதிய ஆண்டில் சுனாமி பேரலைகள் ஏற்படும் என்றும் ஆசியாவில் போர் வெடிக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் ஹிட்லரின் எழுச்சி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோன் எஃப். கெனடியின் படுகொலை போன்ற வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக கணித்துள்ளார். மேலும் பல நூற்றாண்டுகளுக்கு இவர் தீர்க்க தரிசனங்களை கூறியுள்ளார்.

ராணி இரண்டாம் எலிசபெத் இறப்பு மற்றும் அவரது வயது வரை துல்லியமாக கணித்துள்ளார். நாஸ்ட்ரடாமஸின் பெரும்பாலான கணிப்புகள் பலித்துள்ளதால் அவரது கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

தற்போது 2023 ஆம் ஆண்டு விடைபெற்று 2024 ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில் நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அவரது கணிப்பின் படி மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவி விலகுவார், ஒரு பெரிய போர் உருவாகும், மற்றும் வெள்ளத்தால் பெரும் பஞ்சம் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது “தீவுகளின் ராஜா” கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் யார் அந்த அரசர் என்பது குறித்த தகவல் இல்லை. ஆனால் கிங் சார்லஸ் ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன.

மேலும் தீவுகளின் ராஜா, “பலத்தால் விரட்டப்படுவார்” என்றும், அவருக்குப் பதிலாக “ராஜா என்ற அடையாளமே இல்லாதவர்” நியமிக்கப்படுவார் என்றும் நாஸ்ட்ரடாமஸின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமான சுனாமி ஒரு கொடூரமான சுனாமி மற்றும் “பெரும் வெள்ளம்” ஆகியவை உலகின் சில பகுதிகளை அழிக்கும் என்றும் அதைத் தொடர்ந்து பேரழிவு தரும் “பெரும் பஞ்சம்” ஏற்படும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் தெரிவித்துள்ளார்.

பூமி மேலும் வறண்டு போகும் என்றும் பெரும் வெள்ளம் ஏற்படும் என்றும் சுனாமி விவசாய நிலங்களை பாதித்து, கடுமையான பஞ்சத்திற்கு வழி வகுக்கும் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகிவிடுவான். பெரும் சமுத்திரத்தை அச்சத்தில் ஆழ்த்துகிறான்.” என்றும் நாஸ்ட்ரடாமஸ் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு 88வது வயதை எட்ட இருக்கும் போப் பிரான்சிஸ், மாற்றப்படுவார் என்றும் கணித்துள்ளார். அதில் “மிகவும் வயதான போப்பாண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் தேர்ந்தெடுக்கப்படுவார்.” என நாஸ்ட்ரடாமஸ் தெரிவித்துள்ளார்.

நாஸ்ட்ரடாமஸின் முந்தைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ள நிலையில் வரும் புத்தாண்டுக்கான அவரது கணிப்புகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

Tags: #Nostradamus#PredictionFear#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

சேலையில் செம கியூட் ராஷ்மிகா

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கருத்து!

Next Post
அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கருத்து!

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கருத்து!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.