Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா

January 1, 2024
in உலகம், முக்கியச் செய்திகள்
2024-இன் இலக்குகளை அறிவித்தது வடகொரியா
0
SHARES
Share on FacebookShare on Twitter

2024-ஆம் ஆண்டில் அதிகமான இராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்தவும், அணு ஆயுதங்கள், நவீன
ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தயாரிக்கவும் வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இலக்கு நிா்ணயித்திருப்பதாக
அந்நாட்டு அரசு ஊடகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

2024-ஆம் ஆண்டுக்கான அரசின் இலக்குகளைத் தீா்மானிக்க, 5 நாட்கள் நடைபெற்ற ஆளும் தொழிலாளா் கட்சியின்
கூட்டம் கடந்த சனிக்கிழமை (டிச 30) நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள்
மேற்கொண்ட நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2023-இல் அதிகரித்துள்ளது.

இதனால், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர் ஏற்படுவதற்கான சூழல் நிலவுகிறது. எதிரி நாடுகளின்
நடவடிக்கைகளை முறியடிக்க சிறந்த முறையில் நமது இராணுவம் தயாராக இருக்க வேண்டும்.

2024-இல் 3-க்கும் அதிகமான இராணுவ உளவு செயற்கைக்கோள்களைச் செலுத்த வேண்டும். அணு ஆயுதங்களை அதிக
அளவில் தயாரிக்கத் தேவையான கட்டமைப்பை நிறுவ வேண்டும்.

நீா்மூழ்கிக் கப்பல்களின் திறன்களை அதிகரிக்கவும், இராணுவ ட்ரோன்கள் போன்ற நவீன ஆளில்லா தாக்குதல்
கருவிகளை மேம்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை ரத்து செய்வதில் 2019-இல் ஏற்பட்ட முரண்பாட்டால், அப்போதைய
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் இடையேயான நட்புறவு முறிவடைந்தது.

இதையடுத்து, அணு ஆயுதங்களை நவீனமயமாக்குவதில் அதிபா் கிம் ஜோங் உன் கவனம் செலுத்தி வருகிறாா்.

அண்மைக்காலமாக சீனா, ரஷ்யாவுடன் தனது நட்புறவை வடகொரியா அதிகரித்துள்ளது. ரஷியாவுக்குத் தேவையான
இராணுவத் தளபாடங்களை வழங்கி, இதற்குப் பிரதிபலனாக ரஷ்யாவின் உயா் தொழில்நுட்பங்களை தனது நாட்டு
இராணுவத்துக்காக வடகொரியா பெற்று வருகிறது என அமெரிக்காவும், தென்கொரியாவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.

நாட்டின் முதல் இராணுவ உளவு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு நவம்பரில் வடகொரியா விண்ணில் செலுத்தியது
குறிப்பிடத்தக்கது.

Tags: #Announces#North Korea#tamilnews#Targets#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

மன்னாரில் போதைப்பொருள் வைத்திருந்த ஆசிரியர் கைது

Next Post

போதைப் பொருள் பயன்பாடு குறித்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை

Next Post
போதைப் பொருள் பயன்பாடு குறித்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை

போதைப் பொருள் பயன்பாடு குறித்து கனேடிய அரசு அதிரடி நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.