Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

200 கோடி ரூபா முதலீட்டில் அலுமினியத் தொழிற்சாலை!- மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!

June 7, 2022
in உலகம்
200 கோடி ரூபா முதலீட்டில் அலுமினியத் தொழிற்சாலை!- மட்டக்களப்பில் திறந்து வைப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் சுமார் 200 கோடி முதலீட்டில் நிர்மானிக்கப்பட்ட அலுமினிய தொழிற்சாலையொன்று நேற்றுமுன்தினம (05) திகதி மாலை திறந்து வைக்கப்பட்டது.

அல்றா அலுமினியம் உற்பத்திசாலையின் தவிசாளர் ஏ.எம்.உனைஸ் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவிற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குறித்த தொழிற்சாலையினை திறந்து வைத்துள்ளார்.

குறித்த நிகழ்வில் அல்றா குறூப் ஒப் கம்பனியின் நிறுவுனர் ஐ.எல்.அக்பர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி சிறிகாந்த், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி, மாவட்ட தகவல் அதிகாரி வ.ஜீவானந்தன், இலங்கை முதலீட்டு சபையின் பிரதிப்பணிப்பாளர் மகேஸ் அபயகுணவர்த்தன, தொழில் அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

குறித்த தொழிற்சாலையில் கட்டிடங்களுக்கான பொருத்து வேலைகளுக்குப் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டுத் தேவைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுடன் ஏற்றுமதியும் செய்யப்படவுள்ளது.

இத் தொழிற்சாலையினை மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் திறந்து வைக்கப்படுவதனூடாக மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர் யுவதிகள் 200 பேர் நேரடியாகவும் சுமார் 350 பேர் மறைமுக தொழில்வாய்ப்பினையும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையில் பொதுமக்கள் தொழில் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையானது ஆரம்பிக்கப்படுவதனால் இம்மாவட்ட மக்களுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுப்பதுடன், நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு கனிசமான பங்களிப்பை வழங்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்தொழிற்சாலையானது ஜேர்மன், ஜப்பான், வியட்நாம் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளின் நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மீள் சுழற்சி முறையிலான உற்பத்திகளை உருவாக்குகின்றது. உள்நாட்டில் கிடைக்கப்பெறும் அலுமினிய பொருட்கள் மற்றும் புதிய மூலப்பொருட்களையும் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் திறன்படைத்த தொழிநுட்பம் இங்கு பயன்படுத்தப்படுகின்றது. இதனூடாக பூச்சியக் கழிவு முகாமைத்துவம் இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

தொழிற்சாலைகளினால் ஏற்படும் பிரதான பாதிப்பகளான நீர் மாசடைதல், காற்று மாசடைதல் என்பவற்றினைத் தடுப்பதற்காக இலங்கையில் முதன்முதலாக அதிநவீன (Air prolusion control system) காற்று மாசடைவதை தடுக்கும் முறைமை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நீர் சுத்திகரிப்பு முறைமையிலும் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மிகவிரைவில் இவ்வலுமனியம் தயாரிப்புகள் ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதனூடாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்னும் கனிசமான பங்களிப்பினை வழங்கமுடியுமெனவும் அல்றா அலுமனியம் நிறுவனத்தின் தலைவர் ஏ.எம்.ஊனைஸ் இதன்போது கருத்துத் தெரிவித்தார்.

மேலும் மிகவிரைவில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் உள்ளுர் வழங்களைக் கொண்டு தரை ஓடுகள் (மாபில்) தயாரிக்கும் தொழற்சாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இதனூடாக சுமார் இரண்டாயிரம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: 200 கோடிஅலுமினிய தொழிற்சாலைமட்டக்களப்புமுதலீடு
Previous Post

இன்றைய ராசிபலன்- 07.06.2022

Next Post

தமிழக உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்றில் வழங்கிவைப்பு!!

Next Post
தமிழக உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்றில் வழங்கிவைப்பு!!

தமிழக உலர் உணவுப் பொதிகள் மண்முனைப்பற்றில் வழங்கிவைப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.