Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

20 இலட்சம் அதிஸ்டத்தை நம்பி 50 ஆயிரத்தை பறிகொடுத்த பெண்.

September 30, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ குடும்ப பெண் ஒருவரிடம் 0779823271 அழைப்பை மேற்கொண்ட ஒருவர் டயலொக் தொலைபேசி வலையமைப்பு அலுவலர் போன்று உரையாடியவர் குறித்த பெண்ணுக்கு 20 இலட்சம் ரூபா அதிஸ்டம் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தவர் அதிஸ்டத்தின் திகதி நேற்றுடன் முடிவுற்றுள்ளது. அதனை மீளவும் புதுப்பிக்க அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டும் எனவே நாம் கூறும் தொலைபேசி இலக்கங்களுக்கு 50 ஆயிரம் ரூபாவை eZ cash மூலம் பணத்தை அனுப்பிவிட்டு அருகிலுள்ள டயலொக் நிறுவனத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.அதற்கு குறித்த பெண் டயலொக் நிறுவனம் பூட்டப்பட்டு இருப்பதாக கூறியபோது அவர்கள் இலங்கை வங்கிக்கு அடையாள அட்டை, உள்ளிட்ட சில ஆவணங்களை குறிப்பிட்டு அவறின் பிரதிகளுடன் செல்லுமாறும் தெரிவித்துள்ளனர்.இதனை நம்பிய குறித்த பெண் கடன் பெற்று அவர்கள் குறிப்பிட்ட 0740236933, 0741073345, 0741082611, 0741056057, 0741084823 ஆகிய 5 இலக்கங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் eZ cash மூலம் அனுப்பி விட்டு இலங்கை வங்கி சென்று அங்கிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். எனவே குறித்த பெண்ணும் பணத்தை அனுப்பிவிட்டு வங்கி சென்று அங்கிருந்து 0779823271 இவ்விலகத்திற்கு அழைப்பை மேற்கொண்ட போது தொலைபேசி செல்லுபடியற்ற இலக்கம் பதில் வந்துள்ளது. இதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்ட விடயத்தை அவர் உணர்ந்துள்ளார்.இதற்கிடையில் குறித்த பெண் உரையாடிவருடன் தனக்கு இதில் நம்பிக்கையில்லை தான் ஏமாற்றப்படலாம் எனத் தெரிவித்த போது உரையாடிவர் அப்படியானால் நீங்கள் எங்களது முகாமையாளருடன் பேசுங்கள் என தொலைபேசியை பிரிதொருவரிடம் வழங்க அவரும் ஒரு முகாமையாளர் போன்று சிங்களத்தில் உரையாயாடியுள்ளார். இதன் பின்னரே குறித்த பெண் தனக்கு அதிஸ்டம் வீழ்ந்துள்ளது என நம்பியுள்ளார்.நன்கு திட்டமிட்டு ஒரு கூட்டம் மோசடிகளில் ஈடுப்பட்டு வருகிறது அந்த பெண்ணின் பெயர் முகவரி அடையாள அட்டை இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்களை ஏதோ ஒரு வழியில் பெற்று நம்பிக்கைத் தரும் வகையில் உரையாடி ஏமாற்றுகின்றனர். எனவே பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் இருப்பது அவசியம்.

Previous Post

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாட்டை குறைக்குமாறு பிரதமர் ஆலோசனை .

Next Post

கனடாவின் நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் வசித்துவருபவர்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி.

Next Post

கனடாவின் நீண்டகால பராமரிப்பு நிலையத்தில் வசித்துவருபவர்களுக்கு, மூன்றாவது தடுப்பூசி.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.