Thursday, May 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

16 வயது சிறுமியின் மரணம் – ரிஷாட்டை கைது செய்ய நடவடிக்கை.

August 11, 2021
in இலங்கை
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த 16 வயதான
ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ரிஷாட் பதியுதீனையும் கைது செய்வதற்கு
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பொலிஸ் தலைமையகத்தின் கொவிட் கட்டுப்பாட்டு பிரிவுக்கு
பொறுப்பாக செயற்படும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கைது செய்து
மன்றில் முனை்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக
நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக இடம்பெறும் குற்றவியல் விசாரணைகளுக்கு அமைய,
நீதிவான் நீதிமன்றின் விசாரணைகள் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

இதன்போதே, விசாரணையாளர்களுடன், முறைப்பாட்டாளர்கள் சார்பில் முன்னிலையான
அரசின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இருவேறு சந்தர்ப்பங்களில்
இதனை  குறிப்பிட்டார்.

மேலும் சிகிச்சைகளின்போது தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக ஹிஷாலினி
குறிப்பிட்டதாக வெளிப்படுத்தியதாக கூறப்படும் கொழும்பு தேசிய
வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றி, தற்போது
வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதாக கூறப்படும் வைத்தியர் ரந்திக்கவிடம் விஷேட
வாக்கு மூலத்தினை பதிவு செய்யவுள்ளதாகவும் மன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இதற்கான தொடர்பாடலை ஏற்படுத்தித் தருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்
நாயகம் அறிவித்ததாக விசாரணைகளை மேற்பார்வை செய்யும் உதவி பொலிஸ்
அத்தியட்சர் நெவில் சில்வா இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம், உடலில் தீ பரவிய பின்னர், அது அணைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு
ஹிஷாலினி அழைத்து செல்லப்படும்போதும் அவர் சாதாரணமாக நினைவுடன் கூடிய
பேசும் நிலையில் இருந்ததாக கூறப்படும் விடயம் தொடர்பாக விசாரணைகள்
இடம்பெறுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ்
சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இந்த விவகாரத்தில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட
நால்வரினதும் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்றம், அவர்களின் விளக்கமறியல்
காலத்தை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டமையும்
குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைகளை தீர்க்க அமைச்சரவை குழு நியமனம்.

Next Post

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

Next Post

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி - விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.