வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று சனிக்கிழமை காலை 5.15 மணியளவில் பூசைகள் ஆரம்பிக்கப்பட்டு காலை 8.45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றது.
17 தினங்கள் நடைபெறும் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் எதிர்வரும் 10ஆம் திகதி திங்கட்கிழமை நிறைவடையவுள்ளது. பெருந்திரு விழாக்களுக்கான வசதிகள் அனைத்தும் ஆலய நிர்வாகம், பருத்தித்துறை பிரதேச சபை, வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம், பருத்தித்துறை காவல் நிலையம் ஆகியவற்றால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் கலாசார உடை அணிந்து, தங்க ஆபரணங்களைத் தவிர்த்து, ஆசார சீலர்களாக வர வேண்டும என்று ஆலய நிர்வாகம் கோரியுள்ளது.


Discussion about this post