Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை – அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!

May 31, 2024
in இலங்கை, மருத்துவம், முக்கியச் செய்திகள்
வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலை – அரச மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை!
0
SHARES
Share on FacebookShare on Twitter

போதிய வைத்தியர்கள் இன்மை பிரச்சினை நீடித்தால் வைத்தியசாலைகளை மூடவேண்டிய நிலையேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.

உரிய தரப்பினர் இலங்கையின் மருத்துவ அமைப்புக்குத் தேவையான அளவுக்கு வைத்தியர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால் வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளை மூடுவது குறித்து தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவத்துறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத்தொகை அதிகரிப்புக்கு ஏற்ப நியமிக்கப்படும் வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் மேலும் அதிக வைத்தியர்களை உருவாக்க வேண்டும்.

அத்துடன பயிற்றுவிக்க வேண்டும், வசதிகளை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்து வருகின்ற போதிலும் புதிய வைத்தியர்களை உருவாக்கினாலும் அவர்களுக்கு நாட்டில் தொழில் வழங்க முடியாத நிலையேற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1390 வைத்தியர்கள் தங்கள் நியமனங்களை பெற்றுக் கொள்வதற்காக 08 மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.

நோயாளருக்கு உரிய சேவையை வழங்க முடியாமல் தடுமாறும் வைத்தியசாலைகளுக்கு உதவக்கூடிய வைத்தியர்களின் பரிதாபமான துரதிர்ஷ்டவசமான நிலை இதுவாகும்.

நியமனங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களை அறிந்தும் தொடர்புபட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் குற்றம்சுமத்தியுள்ளார்.

Previous Post

பஸ்ஸில் இங்கிலாந்து பெண்ணின் பயணப்பொதியை திருடியவர் கைது

Next Post

1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு ஜூன் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Next Post
1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு ஜூன் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

1700 ரூபா சம்பளம் தொடர்பான வழக்கு ஜூன் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.