Friday, May 16, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது

September 30, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வெளிநாட்டில் வேலை வழங்குவதாகக் கூறி பண மோசடி! பெண்கள் இருவர் கைது
0
SHARES
Share on FacebookShare on Twitter

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட இரண்டு பெண்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவர் தென் கொரியாவில் வேலை பெற்றுத்தருவதாக கூறி மூன்று நபர்களிடம் தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 15 லட்சம் ரூபாயும், இத்தாலியில் வேலை பெற்றுத்தருவதாக கூறி ஒருவரிடமிருந்து 730,000 ரூபாயும் பெற்றுள்ளார்.

கைது நடவடிக்கை

எனினும், உறுதியளித்தபடி வேலை வழங்கப்படவில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைத்த 4 முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டியில் வசிக்கும் பெண் ஒருவர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்ணை கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 4 வழக்குகளுக்கும் தலா 10 இலட்சம் ரூபா வீதம் 2 சரீரப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு 

இதேவேளை, 5 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்வதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் கலகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரை கலகெதர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான மேலும் சில முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவற்றை ஆராய்ந்த பின்னர் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Previous Post

நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவோம்: சூளுரைக்கும் சுமந்திரன்

Next Post
பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவோம்: சூளுரைக்கும் சுமந்திரன்

பொதுத் தேர்தலில் தனித்து களமிறங்குவோம்: சூளுரைக்கும் சுமந்திரன்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.