Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

விலைவாசி உயர்வால் கனடாவை விட்டு சொந்த நாடுகளுக்கே திரும்பி வரும் புலம்பெயர்ந்தோர்

December 12, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
விலைவாசி உயர்வால் கனடாவை விட்டு சொந்த நாடுகளுக்கே திரும்பி வரும் புலம்பெயர்ந்தோர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனடாவுக்குச் சென்று ஒரு சிறந்த வாழ்வை வாழலாம் என்ற ஆசையில் பெரும் தொகை செலவு செய்து கனடாவுக்கு புலம்பெயர்ந்த ஏராளமானோர், கனடாவில் நிலவும் விலைவாசியால் மீண்டும் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பி வருகிறார்கள்.

2022ஆம் ஆண்டில் சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தோர் (93,818) கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பியதாக சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

2023இல், முதல் ஆறு மாதங்களில் மட்டும், 42,000 புலம்பெயர்ந்தோர் கனடாவை விட்டு தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி, ராய்ட்டர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விலைவாசி உயர்வால் கனடாவை விட்டு சொந்த நாடுகளுக்கே திரும்பி வரும் புலம்பெயர்ந்தோர் | 1Lakh Immigrants Leave Canada Due To Cost Increase

 

இப்படி கஷ்டப்பட்டு கனடாவுக்கு புலம்பெயர்ந்தோர், மீண்டும் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்வதற்குக் காரணம், கனடாவில் நிலவும் விலைவாசி.

குறிப்பாக, வாடகைக்கானாலும் சரி சொந்தமாக வாங்குவதானாலும் வீடுகளுக்காகவே மக்கள் தங்கள் வருவாயில் பெரும் பகுதியை செலவிடவேண்டியுள்ளது.

உதாரணமாக, ஹொங்ஹொங் நாட்டவரான காரா (25), மாதம் ஒன்றிற்கு, ஒரு படுக்கையறை குடியிருப்பு ஒன்றிற்கு, 650 டொலர்கள் வாடகை செலுத்துகிறார்.

அவரது வருவாயில், இது சுமார் 30 சதவிகிதம் ஆகும். மூன்று இடங்களில் பகுதி நேரப் பணி செய்துகொண்டே கல்வியும் கற்கும் காரா, தனது வருவாய் முழுவதையுமே செலவு செய்யவேண்டியதாகிவிடுகிறது, கொஞ்சம் கூட சேமிக்கமுடியவில்லை என்கிறார்.

விலைவாசி உயர்வால் கனடாவை விட்டு சொந்த நாடுகளுக்கே திரும்பி வரும் புலம்பெயர்ந்தோர் | 1Lakh Immigrants Leave Canada Due To Cost Increase

 

இதுவே, தன் சொந்த நாடான ஹொங்ஹொங்கில், தனது வருவாயில் மூன்றில் ஒரு பங்கை தன்னால் சேமிக்க முடிந்தது என்கிறார் காரா.

ஆக, இப்படி கனடாவில் சம்பாதித்த பணம் முழுவதையும் கனடாவிலேயே செலவு செய்துவிட்டு, மீதம் எதையும் சேமிக்கமுடியாத பட்சத்தில் கனடாவில் ஏன் வேலை பார்க்கவேண்டும், பேசாமல் சொந்த ஊருக்கே திரும்பிவிடுவோம் என்ற எண்ணம் ஏற்படுவது சகஜம்தானே?

இப்படி வேலைக்கு வந்தவர்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால், படிக்க வந்தவர்கள் பாடும் இனி திண்டாட்டம்தான் போலுள்ளது.

விலைவாசி உயர்வால் கனடாவை விட்டு சொந்த நாடுகளுக்கே திரும்பி வரும் புலம்பெயர்ந்தோர் | 1Lakh Immigrants Leave Canada Due To Cost Increase

ஆம், கனடா 2024 ஜவனரி முதல் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்கிறது. அதன்படி, சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் வங்கிக்கணக்கில் 20,635 டொலர்கள் வைத்திருக்கவேண்டும், தற்போது இந்த தொகை, 10,000 டொலர்களாக உள்ளது, ஜனவரியில் அது சுமார் இரண்டு மடங்கைவிட அதிகமாக உள்ளது.

ஏற்கனவே இருக்கும் நிலத்தையும் வீட்டையும் விற்றோ, அடகு வைத்தோ பிள்ளைகளை கனடாவுக்கு கல்வி கற்க அனுப்பும் பெற்றோர், இந்த கூடுதல் செலவுகளை எப்படி எதிர்கொள்வார்கள்? ஆக மொத்தத்தில், கனடாவில் விலைவாசி விண்ணை எட்டுகிறது, புலம்பெயர்வோர் பாடு திண்டாட்டம்தான்!

Tags: #Immigration#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

அப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Next Post

கனடாவில் காணாமல் போன கிளி: கண்டுபிடித்தால் பரிசு

Next Post
கனடாவில் காணாமல் போன கிளி: கண்டுபிடித்தால் பரிசு

கனடாவில் காணாமல் போன கிளி: கண்டுபிடித்தால் பரிசு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.