Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்

March 30, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வாகன இறக்குமதிக்கான அனுமதி கிடைத்தால் மின்சார மகிழுந்துகளை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், நாட்டுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணியின் அளவைப் பொறுத்து மின்சார மகிழுந்துகளை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. இதில் சில அமைச்சர்கள் ஹைபிரிட் மகிழுந்துகளை இறக்குமதி செய்ய முன்மொழிந்தனர்.

மேலும் பெட்ரோல் மகிழுந்துகளை இறக்குமதி செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும்.

தற்போது மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த எமது இலங்கைத் தொழிலாளர்களுக்கு நாம் வழங்கும் கௌரவத்தையும் அங்கீகாரத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

இதன் காரணமாக மின்னியல் வாகனங்களை நோக்கி செல்ல வேண்டும் என அரசின் சில முடிவுகளும் உள்ளன. அதனால் தான் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டிற்கு மின்னியல் வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய முடிவெடுப்போம்.

எதிர்காலத்தில் நாட்டிற்கு இறக்குமதியாகும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனங்களாக மட்டுமே இருக்கும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரத்தியேகமாக ‘ஹோப் கேட்’ என்ற புதிய சிறப்பு விருந்தினர்களுக்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Tags: #Dollar#ElectricVehicle#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#Vehicle
Previous Post

இன்றைய ராசி பலன்கள் 30-03-2023

Next Post

யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர்

Next Post
யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர்

யாழ்.கச்சதீவில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கடற்படையினர்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.