Wednesday, May 14, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வர்த்தமானி அறிவிப்பிற்கமைய சம்பளத்தை வழங்க 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் – தொழில் அமைச்சர்

July 11, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
வர்த்தமானி அறிவிப்பிற்கமைய சம்பளத்தை வழங்க 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கம் – தொழில் அமைச்சர்
0
SHARES
Share on FacebookShare on Twitter

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில்  வௌியான வர்த்தமானி அறிவிப்பிற்கமைய சம்பளத்தை வழங்க 9 பெருந்தோட்ட நிறுவனங்கள் இணங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று(10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். 

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்காத பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக அவர்களின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யவும் சம்பளத்தை வழங்கும் நிறுவனங்கள் காணப்படுமாயின் அவர்களின் குத்தகை ஒப்பந்த காலத்தை நீடிப்பது தொடர்பிலும் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். 

பெருந்தோட்ட நிறுவனங்கள், அரச மற்றும்  தனியார் பெருந்தோட்ட யாக்கங்களின் தலைவர்களுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் இது தொடர்பில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையின் அடிப்படையில், இம்மாதம் முதல் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 1,350 ரூபாவை வழங்குமாறும் ஊக்குவிப்பு கொடுப்பனவு தொடர்பிலும் அவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தமது கோரிக்கைகளுக்கு 9 நிறுவனங்கள் ஆதரவு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார். 

அத்துடன், சில நிறுவனங்கள் ஊக்குவிப்பு கொடுப்பனவான 350 ரூபாவை விட அதிக தொகையை வழங்க தயாராக உள்ளதாக அமைச்சர் மனுஷ நாணாயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சுற்றுலா பஸ் விபத்திற்குள்ளானதில் 25 பேர் காயம்

Next Post

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

Next Post
திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

திருமுறிகண்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி! மேலும் மூவர் காயம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.