Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வடக்கு வைத்தியசாலைகளில் உயிர்பலி வாங்கும் தகுதியற்ற மருத்துவர்கள்; திடுக்கிடும் தகவல்!

August 29, 2024
in இலங்கை, மருத்துவம், முக்கியச் செய்திகள்
வடக்கு வைத்தியசாலைகளில் உயிர்பலி வாங்கும் தகுதியற்ற மருத்துவர்கள்; திடுக்கிடும் தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடமாகாணத்தில்  உள்ள வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் உள்ள 41 வைத்தியர்கள், மருத்துவர்களாக இருப்பதற்கு தேவையான தகைமைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும் அவர்களில் சிலர் மருத்துவ சபையில் கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

மன்னார் வைத்தியசாலையில் பட்டதாரி பெண்ணொருவரின் மரணம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது சிசு உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுகாதார அதிகாரிகள் அவ்விரு வைத்தியசாலைகளின் வைத்தியர்களின் தகைமைகளை பரிசோதித்த போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன

சுகாதாரப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்ட தகவல்

அதன்படி வவுனியா மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களில் 41 பேர் மூன்றாம் நிலை சேவையில் தகுதி பெறவில்லை என தெரியவந்துள்ளது.

இந்த 41 மருத்துவர்களில் சிலர் அரசு மருத்துவ கவுன்சிலில் பதிவும் செய்யப்படவில்லை. இதேவேளை, அவர்கள் தோற்றவிருந்த மொழிப் பரீட்சை மற்றும் ஏனைய உயர்தரப் பரீட்சைகளுக்கு மேலும் ஒரு குழு வைத்தியர்கள் ஆஜராகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

மன்னார் மற்றும் வவுனியாவில் இரு மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சுகாதாரப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்ட இந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தகவல் வெளியானதை அடுத்து மருத்துவர்கள் தகமைகள் தொடர்பில் வடக்கில் உள்ள பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வடக்கில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களின் தகுதிகள் மற்றும் பிற விவரங்களைக் கோரி விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளtஹாகவும் தெரியவருகின்றது.  

Previous Post

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த கொடூர தந்தை

Next Post

கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி; மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

Next Post
கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி; மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

கொழும்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டி; மன்னாரில் சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.